ஆப்நகரம்

Ind vs Sl 1st t20: அதிரடி திட்டத்தோடு களமிறங்கி இலங்கை பௌலர்கள்...இந்திய பேட்ஸ்மேன்கள் திணறல்!

இந்தியா, இலங்கையிலான முதல் டி20 போட்டி நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 25 Jul 2021, 9:48 pm
இந்தியா, இலங்கை இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
Samayam Tamil இலங்கை அணி


இந்தியா இன்னிங்ஸ்:

இந்திய அணியில் துவக்க வீரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவன் ஆகியோர் களமிறங்கினர். பிரித்வி ஷா முதல் பந்தில் கோல்டன் டக் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து, தவன் மற்றும் சாம்சன் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இருவரும் அதிரடியாக விளையாடி வந்த நிலையில் சாம்சன் 20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து தவன், சூர்யகுமார் யாதவ் இருவரும் இணைந்து இலங்கை பௌலர்களை துவம்சம் செய்யத் துவங்கினர். இதனால், இந்திய அணி ஸ்கோர் கிடுகிடுவென உயரும் எனக் கருதப்பட்ட நிலையில், இலங்கை பௌலர்கள் வேகம் குறைந்த பந்துகளை பயன்படுத்தி நெருக்கடி கொடுத்தார்கள். தவன் 36 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டிவந்த சூர்யகுமார் 34 பந்துகளில் இரண்டு சிக்ஸர், 5 பவுண்டரிகள் விளாசி 50 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இவரும் வேகம் குறைந்த பந்துகளை எதிர்கொள்ள திணறினார்.

டெத் ஓவர்களிலும், இலங்கை பௌலர்கள் முழுமுழுக்க வேகம் குறைந்த பந்துகளை அதிகம் பயன்படுத்தியதால் ஹார்திக் பாண்டியா, இஷான் கிஷன் இருவரும் போராடி ரன்க்களை சேர்த்து வந்தார்கள். இந்நிலையில் ஹார்திக் பாண்டியா 12 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 20 (14), க்ருனால் பாண்டியா 3 (3) கடைசிவரை களத்தில் இருந்தார்கள். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 164/5 ரன்கள் சேர்த்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்