ஆப்நகரம்

மரண மாஸ் காட்டிய கோலி; விஸ்வரூபம் எடுத்த தல தோனி - இந்தியா அசத்தல் வெற்றி!

அடிலைடு: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

Samayam Tamil 15 Jan 2019, 5:04 pm
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக் கனியை பறித்தது.
Samayam Tamil Kohli


இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிரடியாக விளையாடிய மார்ஷ் 131 ரன்கள் குவித்தார். மேக்ஸ்வெல் 48 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். ஷமி 3 விக்கெட்கள் வீழ்த்தினார். 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 298 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா 43, தவான் 32 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கோலி அதிரடியாக விளையாடி 104 ரன்கள் குவித்தார். ராயுடு 24 ரன்களில் அவுட் ஆனார்.

இறுதியாக தோனி 55 ரன்கள், தினேஷ் கார்த்திக் 25 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றனர். 49.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்து, இந்திய அணி வெற்றி பெற்றது.

104 ரன்கள் குவித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, இந்திய அணி 1-1 என சமன் செய்துள்ளது. 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 18ஆம் தேதி, மெல்போர்னில் நடைபெற உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்