ஆப்நகரம்

Ind vs SL 3rd ODI: டாஸ் வென்றது இந்தியா...5 புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு...திராவிட் கலக்கல்!

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்றது.

Samayam Tamil 23 Jul 2021, 2:41 pm
இந்தியா, இலங்கையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், முதல் இரண்டு போட்டிகள் இந்திய அணி அபார வெற்றிபெற்ற நிலையில் இன்று மூன்றாவது போட்டி துவங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளது.
Samayam Tamil இந்தியா vs இலங்கை


டாஸ் வென்றப் பிறகு பேசிய ஷிகர் தவன், “நாங்கள் பேட் செய்ய விரும்புகிறோம். இலங்கைக்கு எதிராக பெரிய இலக்கை நிர்ணயிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. மொத்தம் 6 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 5 புதுமுக வீரர்கள் களமிறங்கவுள்ளனர். இளம் வீரர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளதால், அவர்கள் எப்படி விளையாடப் போகிறார்கள் என்பதை காண அவலோடு இருக்கிறேன்” எனக் கூறினார்.

அடுத்துப் பேசிய இலங்கை கேப்டன் தஷுன் ஷனகா, “பிட்சில் வறண்டு காணப்படுகிறது. அணியில் மூன்று மாற்றங்ளை செய்திருக்கிறோம். இப்போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. நிச்சயம் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார்.

இந்திய XI அணி: ஷிகர் தவன் (கேப்டன்), பிரித்வி ஷா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், மனிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், நிதிஷ் ராணா, ஹார்திக் பாண்டியா, கிருஷ்ணப்பா கௌதம், ராகுல் சஹார், நவ்தீப் சைனி, சேத்தன் சகார்யா.

இலங்கை XI அணி: அவஷ்கா பெர்ணான்டோ, மினோட் பனுகா, பனுகா ராஜபக்ஷா, தனஞ்சயா டி சில்வா, சரித் அசலங்கா, தஷுன் ஷனகா (கேப்டன்), ரமேஷ் ஹசரங்கா, சமிகா கருனரத்னே, அகிலா தனஞ்ஜெயா, தஷ்மந்தா சமீரா, பிரவின் ஜெயவிக்ரமா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்