ஆப்நகரம்

‘பூம்’ ‘பூம்’... அப்ரிடியின் சாதனையை போட்டுத்தாக்கிய ‘கிங்’ கோலி!

மொஹாலி: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் சாதனையை இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி முறியடித்தார்.

Samayam Tamil 19 Sep 2019, 5:14 pm
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் கேப்டன் கோலி, 72 ரன்கள் அடித்து கைகொடுக்க, இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
Samayam Tamil Virat kohli - afridi


ஆட்ட நாயகன் கோலி...
இந்நிலையில் இதில் சிறப்பாக விளையாடிய கோலி, ஆட்டநாயகன் விருதை வென்றார். இது இந்திய கேப்டன் கோலி டி-20 அரங்கில் பெற்ற, 11வது ஆட்டநாயகன் விருதாக அமைந்தது.


அப்ரிடி சாதனை சமன்...
இதன் மூலம் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியின் சாதனையை சமன் செய்தார் கோலி. இருவரும் தலா 11 ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளனர். முன்னதாக கோலி, ரோஹித் ஷர்மாவின் டி-20 அரங்கில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தகர்த்தார்.


கோலி தம்பி....
இதுகுறித்து அப்ரிடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘வாழ்த்துக்கள் கோலி, நீ ஒரு சிறந்த வீரர், வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள். உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்த வாழ்த்துக்கள்,’ என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்