ஆப்நகரம்

MS Dhoni: அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல....பா...: ‘தல’ தோனி விஷயத்தில் தாறுமாறா அடம்பிடிக்கும் பிரசாத்!

மும்பை: முன்னாள் கேப்டன் தோனி விஷயத்தில் தெளிவாக உள்ளதாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Oct 2019, 7:25 pm
இந்திய கிரிக்கெட் அணியில் தோனியை கடந்து இளம் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் விஷயத்தில் உறுதியாக உள்ளதாக தேர்வுக்குழு தலைவ எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தோனியின் எதிர்காலம் குறித்து அவரிடம் பேசுவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Virat Kohli 1


உறுதி... சத்தியம்...
இதுகுறித்து பிரசாத் கூறுகையில், ‘தோனியை கடந்து இளம் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில் எந்த மாற்றமும் இல்லை. உலகக்கோப்பை தொடருக்கு பின் மிகத்தெளிவாக உள்ளோம். ரிஷப் பந்துக்கு அதிக வாய்ப்பு வழங்குவோம் என்பதில் சந்தேகமே இல்லை.

தன்னம்பிக்கை.... தன்னடக்கம்... தனி வழி....: ‘தல’ தோனிக்கு உதவிய செல்ல மகள் ஜிவா!

புரிந்து கொள்வார்
தற்போது பந்த் சிறப்பாக செயல்படாமல் இருக்கலாம். ஆனால் இனி கவனம் முழுதும் அவர் மீது தான் இருக்கும். உலகக்கோப்பை தொடருக்கு பின் இளம் வீரர்களுக்கு தான் அதிக வாய்ப்பு. தோனியிடம் இது தொடர்பாக நிச்சயம் பேசுவோம். அவரும் எதிர்கால திட்டத்தை புரிந்து கொண்டு வழி விடுவார் என எதிர்பார்க்கிறோம்.’ என்றார்.


சாம்சன் எதற்கு?
இதற்கிடையில் சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே தொடரில் இரட்டை சதம் விளாசிய சஞ்சு சாம்சன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டது குறித்து பேசிய பிரசாத், ‘சஞ்சு சாம்சன் அணியில் ஒரு பேட்ஸ்மேனாக சேர்க்கப்பட்டுள்ளார். ரிஷப் பந்த் தான் விக்கெட் கீப்பராக செயல்படுவார். கடந்த 3-4 ஆண்டுகளாக திணறி வந்த சாம்சன், தற்போது முன்னேறியுள்ளார்.’ என்றார்.

மீண்டும் மரண மாஸாக களமிறங்க ‘தல’ தோனி மாஸ்டர் பிளான்...: எப்போ வருவார் தெரியுமா?

மரியாதை இருக்கு
முன்னதாக பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில், ‘தோனி மனதில் என்ன உள்ளது என தெரியவில்லை. தோனியை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. நான் உள்ளவரை அனைவருக்கும் மரியாதை கிடைக்கும். ’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்