ஆப்நகரம்

'பாடும் நிலா' எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு தினேஷ் கார்த்திக் இரங்கல்!

பின்னணி பாடகர் எஸ்பிபியின் மறைவுக்கு இந்திய அணி வீரரும், கொல்கத்தா க்நைட் ரைடர்ஸ் அணி கேப்டனுமான தினேஷ் கார்த்திக் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Sep 2020, 3:42 pm
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்(74) கொரோனா தொற்று காரணமாகத் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். பிற்பகல் 1 மணியளவில் தந்தை காலமானதாக மகன் சரண் அறிவித்த நிலையில், பலர் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்திய அணி வீரரும், கொல்கத்தா க்நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் ‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு ட்விட்டர் மூலம் இரங்கள் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil dinesh karthik spb


நேற்று கிரிக்கெட் ஜாம்பவான் டீன் ஜோன்ஸ் மறைந்த நிலையில், இன்று பாலசும்பரமணியம் மறைந்திருப்பது என்னை மிகவும் பாதித்துள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் பல்துறை பாடகராக இருந்த எஸ்.பி.பியின் ஆன்மா சாந்தியடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

“நேற்றும், இன்றும் மிகப்பெரிய சோகமான செய்திகள் கிடைத்துள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான் டீன் ஜோன்ஸ் நம்முடன் இல்லாதது கிரிக்கெட் உலகிற்கு மிகப்பெரிய பேரிழப்பு. அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்” என்று பதிவிட்டுள்ள அவர், அடுத்த ட்விட்டர் பதிவில் எஸ்.பி.பிக்கு இரங்கள் தெரிவித்துள்ளார்.

“எனக்குப் பிடித்த கலைஞர் ஒருவர் தனது இறுதி மூச்சை இன்று நிறுத்தியுள்ளார். இந்திய சினிமா வரலாற்றில் மிகச் சிறந்த மற்றும் பல்துறை பாடகர்களில் ஒருவராக நீங்கள் இருந்தீர்கள். இந்த உலகம் உங்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரரும் ஐபிஎல் கமண்டேட்டருமான டீன் ஜோன்ஸ் திடீர் மரணம்!

“நீங்கள் திரும்பிவர முடியாத இடத்திற்குச் சென்றுவிட்டீர்கள். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். ஐயாவின் குடும்பத்தினர், நண்பர்களுக்கு என்னைப்போன்ற அவரது கோடிக்கணக்கான ரசிகர்களும் வருத்தத்தைப் பகிர்ந்துகொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

”உங்கள் வீட்டிற்கு ஒருமுறை வந்ததை நான் நினைவில் வைத்திருக்கிறேன். எனக்குப் பிடித்த சில பாடல் வரிகளை பாடச்சொல்லி நீங்கள் கட்டாயப்படுத்தினீர்கள். அந்த நாளை எப்போதும் நான் மறக்கமாட்டேன். எஸ்.பி.பி ஐயா, நான் பொய் சொல்லப்போவதில்லை, நான் அதை மீண்டும் ஒருமுறை செய்ய விரும்புகிறேன். உங்களுடைய நினைவுகள் நிச்சயம் என் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்” எனத் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்