ஆப்நகரம்

Indian Team Corona Positive: இங்கிலாந்து சுற்றுப் பயணம்…2 இந்திய வீரர்களுக்கு கொரோனா…நிர்வாகம் அறிவிப்பு!

Ind vs Eng: இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இருக்கும் இரண்டு இந்திய வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 15 Jul 2021, 3:24 pm
இங்கிலாந்து சௌதம்ப்டானில் ஜூலை 19 முதல் 23ஆம் தேதிவரை நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம், இந்தியா 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றது.
Samayam Tamil இந்திய அணி


அதனைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் நாடு திரும்பவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக, இங்கிலாந்திலேயே தங்கியிருக்கிறார்கள்.

இத்தொடர் ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 வரை நடைபெறவுள்ளது. போட்டிகள் துவங்குவதற்கு, ஒரு மாத காலம் இடைவெளி இருந்ததால், இந்திய வீரர்களுக்கு மூன்று வாரம் ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. இந்திய வீரர்களும் மருத்துவப் பாதுகாப்பு வட்டத்தைவிட்டு வெளியேறி, ஊர் சுற்றினர். அப்போது எடுத்த புகைப்படங்களை விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் ஷர்மா, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி போன்றவர்கள் இணையத்தில் பகிர்ந்திருந்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

இந்நிலையில், இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இருக்கும் இந்திய அணியைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இருப்பினும், அவர்களின் பெயர்களை வெளியிடவில்லை. இருவரும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்