ஆப்நகரம்

கடினமான காலகட்டத்தில் இது தான் மிகவும் முக்கியம்: தினேஷ் கார்த்திக்!

மும்பை: விளையாட்டில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் அவரின் மனைவி தீபிகா பல்லிகல் பேசியுள்ளனர்.

Samayam Tamil 31 May 2020, 2:06 pm
தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் அவரின் மனைவி தீபிகா பல்லிகல் பங்கேற்றனர். அதில் கடினமான சூழ்நிலையில் மனோதிடம் எவ்வளவு முக்கியம் என்பது குறித்து தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
Samayam Tamil Dinesh Karthik and Dipika Pallikal


நிதாகஸ் கோப்பை ஃபைனல்
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில்,“நிதாகஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் ஃபைனல் போட்டி போன்ற ஒருநல்ல வாய்ப்புக்காக காத்திருந்தேன். அதுபோன்ற ஒரு தருணத்துக்காக கடினமாக பயிற்சி மேற்கொண்டேன். 2 ஓவர்களில் 34 ரன்கள் தேவைப்பட்டது. அப்போதும் நாம் வெற்றி பெறுவோம் என் நம்பினேன்” என்றார்.

தங்களின் விளையாட்டு பயணத்தில் தினேஷ் கார்த்திக், மற்றும் தீபிகா ஆகியோர் கடினமாக நேரங்களை கடந்து தான் வந்துள்ளனர். கார்த்திக் சுமார் 17 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியில் இடம்பெறுள்ளார். இதில் பல கடினமான தருணத்தை கடந்துள்ளார். அதேபோல தீபிகாவும் 2010 காமன்வெல்த் போட்டிகளை தவறவிட்டார்.

இனி என்ன நடக்கும்ன்னு யாருக்குமே தெரியாது: கொரோனா மாற்றம் குறித்து கிங் கோலி!

எப்படி சமாளிப்பது
இந்த தருணங்களை எப்படி சமாளித்தோம் என கார்த்திக் கூறுகையில்,“மனதளவில் கடினமான தருணத்தை சமாளிக்க வேண்டும் என்பதை சொல்ல வேண்டும் என்றால், ஒரே விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். தற்போது என்ன தேவை என்பதையும் தொடர்ச்சியாக சரியாக செய்ய வேண்டும். ஒவ்வொரு வெற்றிகரமான வீரர்களும் ஒரு காலகட்டத்தில் வலிமை பெறுவார்கள்” என்றார்.

தல தோனி இன்னும் கிரிக்கெட்டுக்கு செய்ய வேண்டியது நிறைய இருக்கு : அனிருத்!

அதேபோல தீபிகா கூறுகையில்,“நான் டாப்-20 இடங்களுக்குள் வேகமாக முன்னேறிவிட்டேன். ஆனால் அதற்கு பின் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் தவித்தேன். அதேநேரம் டாப்- 10 இல் நுழைய வெறும் களத்தில் விளையாடினால் மட்டும் போதாது. பிட்னஸ் முறைகள், என பல விஷயங்கள் செய்ய வேண்டும். அதனால் இளம் வயதிலேயே மனதை பக்குவப்படுத்த துவங்கினால் இளம் வயதிலேயே மிகச்சிறந்த முடிவுகளை பெற முடியும்” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்