ஆப்நகரம்

ரொம்ப சீக்கரமே வருவேன்.... : ரீஎண்ட்ரியை வெயிட்டா சொன்ன ‘யார்க்கர் கிங்’ பும்ரா!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, வெயிட்ட போட்டோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 29 Oct 2019, 4:02 pm
சமீபத்தில் முடிவுக்கு வந்த தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கோலி தலைமையிலான இந்திய அணி 2-0 என கைப்பற்றியது. இதில் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்திய யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் பும்ரா பங்கேற்கவில்லை.
Samayam Tamil Jasprit Bumrah


ரீஎண்ட்ரி...
இந்நிலையில் தற்போது காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் முழு உடற்தகுதி பெற பும்ரா கடுமையாக உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில், பும்ரா உடற்பயிற்சி செய்யும் போட்டோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

கம்முன்னு இருந்த ஷாகிப்... பெரிய ஆப்பா வைக்கும் ஐசிசி...!

ஆப்பரேஷன் இல்லை...
இவரின் இந்த போட்டோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக பும்ராவின் காயத்தை சோதனை செய்த மருத்துவர்கள், இவரின் காயத்துக்கு ஆப்பரேஷன் தேவையில்லை என தெரிவித்தனர்.

அந்நிய மண்ணில் மட்டும்..
இந்நிலையில் அடுத்து உள்ளூரில் நடக்கவுள்ள, வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பும்ரா பங்கேற்கவில்லை. மாறாக அடுத்த 2020 ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி பங்கேற்கும் தொடரின் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்புவார் என தெரிகிறது.

ஒன்னு உண்மை ஆகிருச்சு... இன்னும் ஒன்னுதான் பாக்கி...: கங்குலி குறித்து 12 வருஷத்துக்கு முன்னே கணித்த சேவாக்!

அந்நிய மண்ணில் எக்ஸ்பர்ட் பவுலராக மட்டும் பும்ராவை பயன்படுத்தும் திட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், அணி நிர்வாகமும் செயல்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான உள்ளூர் டெஸ்ட் தொடருக்கு முன்பாக பும்ரா திடீரென காயம் காரணமாக விலகியது இந்த குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையிலும் அமைந்தது.

View this post on Instagram Coming soon! 💪🏼 A post shared by jasprit bumrah (@jaspritb1) on Oct 29, 2019 at 12:15am PDT

ரொம்ப ஆபத்து
தற்போதும் கூட நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அந்நிய மண்ணில் மட்டும் பும்ராவை பயன்படுத்த நினைத்து தான் தற்போது பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. ஒருவேளை இதை உண்மையாக மனதில் கொண்டு கேப்டன் கோலி செயல்படும்பட்சத்தில், பும்ராவை ஒரு தலைபட்ச பவுலராக பயன்படுத்தி அவரின் திறமையை கட்டுப்படுத்துவது இந்திய அணிக்கே ஆபத்தாக அமைய வாய்ப்புள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்