ஆப்நகரம்

அதெல்லாம் ஒரு ஆணியும் வேணாம்.... சும்மா அடிச்சு தூக்குடா... செம்ம காண்டான ரோஹித்!

இந்தூர்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது ரோஹித் ஷர்மா, களத்தில் இருந்த மாயங்க் அகர்வால், ரவிந்திர ஜடேஜாவுக்கு தகவல் அளித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 16 Nov 2019, 2:22 pm
வங்கதேச அணிக்கு எதிராக இந்தூரில் நடக்கும் முதல் டெஸ்டில் இந்திய அணியின் துவக்க வீரர் மாயங்க் அகர்வால் 150 ரன்கள் எடுத்தபோது, கேப்டன் கோலி, பெவிலியனில் இருந்து இரட்டைசதம் எட்டும்வரை விளையாடும்படி சிக்னல் செய்தார்.
Samayam Tamil Rohit Sharma


தொடர்ந்த மாயங்க்...
கேப்டன் கோலியின் கட்டளைக்கு ஏற்ப மாயங்க் அகர்வால் இரட்டைசதம் அடித்து, மீண்டும் கோலியை நோக்கி, இரண்டு விரல்களை உயர்த்தி சைகை செய்தார். அப்போது கோலி மூன்று விரல்களை காட்டி முச்சதம் அடிக்கும்படி சிக்னல் செய்தார்.

பல ஆண்டு காத்திருப்பு... ரசிகர்களின் இதயங்களை உடைத்த சச்சின்.... கிரிக்கெட்டுக்கு ‘பை-பை’ சொன்ன தினம்!

என்னாடா?
இதற்கிடையில் ரோஹித் ஷர்மா பெவிலியனில் இருந்து களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த மாயங்க் அகர்வால், மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோரை கட்டையை போட்டு அறுக்காமல், விட்டு விளாசும்படி சைகை காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


ஒரே சிரிப்பு மழை
ரோஹித் ஷர்மாவின் சைகையைப் பார்த்து பெவிலியனில் அமர்ந்திருந்த கேப்டன் கோலி உட்பட எல்லா வீரர்களும் சிரித்தனர். ரோஹித்தின் சைகைக்கு பின் மாயங்க் அகர்வால் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் சிக்சர்களாக விளாசினர். தொடர்ந்து களமிறங்கிய உமேஷ் யாதவும் அதிரடி காட்டினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்