ஆப்நகரம்

என் வாழ்நாளில் இதை விட படுமோசமான தருணம் இல்லை: ‘டான்’ ரோஹித் புலம்பல்!

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா , தன் வாழ்நாளில் சந்தித்த மோசமான தருணம் குறித்து பேசியுள்ளார்.

Samayam Tamil 28 Mar 2020, 12:15 pm
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா , தன் வாழ்நாளில் சந்தித்த மோசமான தருணம் குறித்து பேசியுள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக உள்ளவர் இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா. ஒருநாள் கிரிக்கெட்டில் எல்லா வீரர்களும் ஒரு முறையாவது எட்டிவிட வேண்டும் என நினைக்கும் இரட்டை சதத்தை மூன்று முறை சர்வசாதாரணமாக எட்டியுள்ளார்.
Samayam Tamil indian opener rohit sharma remains his saddest moment of his career
என் வாழ்நாளில் இதை விட படுமோசமான தருணம் இல்லை: ‘டான்’ ரோஹித் புலம்பல்!



தவிர்க்க முடியாத நிலை

இதுவரை 224 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள 9115 ரன்கள் விளாசியுள்ளார் ரோஹித். இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவரான இவர், முழு உடற்தகுதியுடன் இருந்தால் கண்டிப்பாக அணியில் இடம் பிடிப்பார். இன்று இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவராக உள்ள ரோஹித்தின் நிலை 9 ஆண்டுகளுக்கு முன் அப்படி இல்லை.

ஓரங்கட்டப்பட்ட டான்

கடந்த 2011 இல் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பாக ரோஹித்தின் நிலை மிகவும் பரிதாபமாகவே இருந்தது எனலாம். அந்த காலகட்டத்தில் ரோஹித் ஷர்மா சொல்லிக்கொள்ளும் அளவு பெரிதாக எதுவும் ரன்கள் சேர்க்கவில்லை. இதனால் அந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ரோஹித் ஓரங்கட்டப்பட்டார். சொந்த மண்ணில் நடந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சுமார் 28 ஆண்டுகளுக்கு பின் கோப்பை வென்று வரலாறு படைத்தது.


Covid-19: கொரோனா வைரஸூக்கு எதிரான போராட்டத்தில் நிச்சயம் வெல்வோம் : கபில் தேவ்!

​புலம்பல்

இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளதால், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளத்தில் படுபிஸியாக உள்ளனர். இதில் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டசனுடன் இன்ஸ்டாகிராம் லைவ்வில் பேசிய ரோஹித் ஷர்மா, தனது கிரிக்கெட் பயணத்தில் மோசமான தருணங்கள் குறித்து பேசியுள்ளார்.


ரூ. 1 லட்சம் தான் தல தோனி வழங்கினாரா... கொந்தளித்த மனைவி ஷாக்சி!

நானே காரணம்

இதுகுறித்து ரோஹித் ஷர்மா கூறுகையில்,“கடந்த 2011 இல் சொந்த மண்ணில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது தான் என் வாழ்நாளின் மிகவும் மோசமான தருணம். குறிப்பாக ஃபைனல் போட்டி என் சொந்த ஊரில் நடந்தது. ஆனால் இதற்கு என் மோசமான பார்ம் தான் காரணமாக அமைந்தது. எனது சிறப்பான ஆட்டத்தை நான் வெளிப்படுத்த தவறிவிட்டேன்” என்றார்.

உலக சாதனை

ஆனால் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா, ஒரே உலகக்கோப்பையில் அதிக சதம் (5 சதங்கள்) அடித்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார். மேலும் அந்த தொடரில் மொத்தமாக 648 ரன்கள் குவித்தார். இருந்தாலும் இந்திய அணி அரையிறுதில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்