ஆப்நகரம்

Coronavirus: தாதா கங்குலியை தொடர்ந்து ஜாம்பவான் சச்சினும் நிதியுதவி!

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளார்.

Samayam Tamil 27 Mar 2020, 1:10 pm
உலகம் முழுதும் கொடூரமான கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்த்து கடுமையாக போராடி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் காட்டுத்தீயை விட அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதற்கிடையில் இந்த வைரஸ் தாக்கத்தை எதிர்த்து போராட மருத்துவ உபகரணங்கள் வாங்க பலரும் உதவி செய்து வருகின்றனர்.
Samayam Tamil சச்சின்


கங்குலி உதவி
இந்த வகையில் ஏழை மக்களுக்கு உதவும் விதமாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலி ரூ. 50 லட்சத்துக்கு அரிசி வழங்கினார். இதே போல பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ரூ. 10 லட்சம் வழங்கினார். மேலும் காம்பிர் உட்பட பலரும் நாட்டு மக்களை காக்க தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

சச்சின் 50 லட்சம்
இவர்களை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் ரூ. 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். அதில் ரூ. 25 லட்சம் மகாராஷ்டிரா முதல்வர் நிவாரண நிதியாகவும், மற்றொரு ரூ. 25 லட்சம் பிரதமர் நிவாரண நிதியாகவும் சச்சின் வழங்கியுள்ளார்.

ரூ. 50 லட்சத்துக்கு அரிசி வழங்குகிறார் பிசிசிஐ தலைவர் தாதா கங்குலி!

மும்பை கிரிக்கெட் சங்கம்
இதேபோல இன்று காலையில் மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் டெலி கான்பரன்ஸ் மூலம் நடந்த கூட்டத்தில், எம்சிஏ சார்பாக் ரூ. 50 லட்சம் நிதி வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது. சச்சின் வழங்கிய நிதி குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “பேரழிவு காலங்களில் வழங்குவது போல தான் தற்போதும் சச்சின் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். தனது எம்பி சம்பளம் முழுவதையும் பிரதமர் நிவாரண நிதியாகவே சச்சின் வழங்கிவிட்டார்” என்றார்.

நீங்க தனியா இல்ல... மருத்துவ பணியாளர்களுக்கு வில்லியம்சன் எழுதிய உருக்கமான கடிதம்!

நீண்ட இடைவேளை
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பரவிய போதும் சச்சின் 25,000 ஆஸ்திரேலிய டாலர்கள் நிதியுதவி அளித்திருந்தார். மேலும் அந்த பேரிடர் நிவாரண நிதி திரட்டும் கிரிக்கெட் போட்டிலும் சச்சின் பங்கேற்றார். அப்போது மிக நீண்ட இடைவேளைக்கு பின் சச்சின் களத்தில் பேட்டிங் செய்து அசத்தினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்