ஆப்நகரம்

IPL 2019: ஐபிஎல் ஏலம் பெங்களூருவிலிருந்து ஜெய்பூருக்கு திடீர் மாற்றம்

ஐபிஎல் 2019 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவிலிருந்து ஜெய்பூருக்கு திடீர் மாற்றப்பட்டுள்ளது.

Samayam Tamil 4 Dec 2018, 1:29 pm
ஐபிஎல் போட்டிக்கான ஏலம் டிசம்பர் 18ம் தேதி நடக்க உள்ள நிலையில், ஏலத்திற்கு முன்பே பல வீரர்கள் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டும், எந்த வீரர்களை தக்க வைக்கின்றோம் என்பதும், புதிய வீரர்கள் பலரை சில அணிகள் வாங்கியும் உள்ளன.
Samayam Tamil ipl


இந்நிலையில் கடந்தாண்டு போன்று இல்லாமல், இந்த முறை வெறும் 70 வீரர்கள் மட்டும் டிசம்பர் 18ல் நடக்கும் ஐபிஎல் ஏலத்தில் இடம்பெறுவர்.

50 இந்திய வீரர்கள், 20 வெளிநாட்டு வீரர்கள் இந்த ஏலத்தில் விடப்பட உள்ளனர். ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் மொத்த மதிப்பு ரூ. 142.25 கோடி ஆகும்.

பெங்களூருவிலிருந்து ஜெய்பூர் :
இந்நிலையில் ஐபிஎல் ஏலம் பூங்கா நகரான பெங்களூருவிலிருந்து, இளம்சிவப்பு நகரான ஜெய்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது.

2019ல் நாடாளுமன்ற தேர்தல் நடைப்பெற இருப்பதால், துபாய், அபுதாபியில் சில போட்டிகள் நடக்கும் என்றும், பின்னர் தேர்தலுக்கு பின் இந்தியாவில் நடக்கும் என தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்