ஆப்நகரம்

மீண்டும் ‘தல’ தோனி தலைமையில் கெத்தாக களமிறங்கும் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ : ஐந்து வீரர்களை தக்க வைக்கவும் அனுமதி!

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 5 பழைய வீரர்களை தக்கவைக்க பிசிசிஐ., கவர்னிங் கவுண்சில் அனுமதி அளித்துள்ளது. மற்ற வீரர்களை ஏலம் மூலம் எடுத்துக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

TOI Sports 6 Dec 2017, 3:45 pm
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 5 பழைய வீரர்களை தக்கவைக்க பிசிசிஐ., கவர்னிங் கவுண்சில் அனுமதி அளித்துள்ளது. மற்ற வீரர்களை ஏலம் மூலம் எடுத்துக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil indian premier league governing council allows franchises to retain maximum five players
மீண்டும் ‘தல’ தோனி தலைமையில் கெத்தாக களமிறங்கும் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ : ஐந்து வீரர்களை தக்க வைக்கவும் அனுமதி!


இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் நடக்கிறது. இதில் கடந்த 2015ல் நடந்த தொடரில் நடந்த ஸ்பாட் பிக்சிங் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டு தடைவிதிக்கப்பட்டது.
இந்த தடைக்காலம் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் முடிவடைந்ததையடுத்து, இரு அணிகளும் மீண்டும் களமிறங்க தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்க சிக்கல்களை சரி செய்து தற்போது பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் தங்களது பழைய வீர்ர்களை தக்கவைப்பதில் சிக்கல் நீடித்தது. தற்போது கூடிய ஐபிஎல் தொடருக்கான கவர்னிங் கவுண்சில் கூட்டத்தில் இதற்கு முடிவு கிடைத்துள்ளது.

இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணிகள் மீண்டும் ஐபில் தொடரில் பங்கேற்க அனுமதி அளித்ததோடு, அந்த அணிகளில் பழைய 5 வீரர்களையும் தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற வீரர்களை குஜராத் லயனஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளில் இருந்து ஏலம் மூலம் எடுத்துக்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, ராஜஸ்தான் அணிகள் மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்பியதால் குஜராத், புனே அணிகள் தானாக தகுதி நீக்கம் அடையும்.
யார்...யார்...?
இந்த அனுமதியையடுத்து சென்னை அணி, தோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ, மெக்கலம் ஆகியோரையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ரகானே, ஸ்மித், பால்க்னர் ஆகியோரையும் தக்கவைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

New Delhi: Indian Premier League (IPL) governing council, on Wednesday, announced that franchises can buy back a maximum of five players from their last year's squads.

அடுத்த செய்தி

டிரெண்டிங்