ஆப்நகரம்

‘ட்விட்டர்’ தோனி கணக்கிற்கு ப்ளூ டிக் நீக்கம்…ரசிகர்கள் கொந்தளிப்பு!

மகேந்திரசிங் தோனியின் ட்விட்டர் கணக்கிற்கு ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 6 Aug 2021, 4:34 pm
உலக அளவில் தலைசிறந்த கேப்டனாகவும், பெஸ்ட் பினிஷராக திகழ்ந்த மகேந்திரசிங் தோனி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். அப்போதுவரை ஓரளவுக்கு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்த தோனி, ஓய்வு அறிவித்த பிறகு சமூக வலைத்தளங்களிலிருந்து விலகி, குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார்.
Samayam Tamil மகேந்திரசிங் தோனி


அவர் ஓய்வு அறிவித்தபிறகு பலமுறை குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருக்கிறார். இருப்பினும், சமூக வலைத்தளங்களில் புகைப்படம் எதுவும் பகிர்வது கிடையாது. இவரது மனைவி சாக்ஷி தோனிதான் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் பகிர்வார். சமீபத்தில் தோனி புதுக் குதிரை வாங்கியதைக்கூட, சாக்ஷி தோனிதான் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.

இப்படி தோனி தொடர்ந்து ட்விட்டர் கணக்கைப் பயன்படுத்தாமல் இருந்து வந்ததால், அவருக்கு வழங்கப்பட்ட ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. ப்ளூ டிக் அனைவருக்கும் வழங்கப்படமாட்டாது. சமூகத்தில் பிரபலமானவர்களுக்கு மட்டுமே ப்ளூ டிக் வழங்கப்படும். இந்நிலையில் தற்போது ட்விட்டரில் 8.20 மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்ட தோனிக்கு ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஏன் நீக்கம்:

பிரபலங்கள், தங்களின் ட்விட்டர் கணக்கை ஓராண்டுக்கு மேல் பயன்படுத்தவில்லை என்றால் அவர்களுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக், உடனடியாக நீக்கப்படும் என ட்விட்டர் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. இதனையடுத்து கணக்கை ஓராண்டு பயன்படுத்தாமல் இருந்த துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உட்பட சில முக்கிய அரசியல் தலைவர்களில் ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டது. அதன்பிறகு, இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் மீண்டும் ப்ளூ டிக் கொடுக்கப்பட்டது.

தோனிக்கும் தற்போது ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. இது பெரிய சர்ச்சையாகி வருவதால் மீண்டும் ப்ளூ டிக் வழங்கப்படும் என கருதப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்