ஆப்நகரம்

முத்தரப்பு கிரிக்கெட்: ஆஸியிடம் மரண அடி வாங்கிய இந்திய பெண்கள் அணி!

கான்பரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முத்தரப்பு தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வியை சந்தித்தது.

Samayam Tamil 2 Feb 2020, 1:26 pm
ஆஸ்திரேலியாவில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று கான்பராவில் நடந்த தனது இரண்டாவது லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது.
Samayam Tamil Womens Team India


இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (35), ஹர்மன்பிரீத் கவுர் (28), ராதா யாதவ் (11) ஆகியோர் தவிர, மற்ற யாரும் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை. இதையடுத்து இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்தது.

எலிசி பெர்ரி அபாரம்
சுலப இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு எலிசி பெர்ரி (49), கார்டனர் (22) ஆகியோர் கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 2 புள்ளிகள் பெற்றது.

தலா 2 புள்ளி
இதையடுத்து முத்தரப்பு தொடரின் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் தலா 2 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆனால் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி (+0.220) முதலிடத்திலும் இந்தியா (-0.058) இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து அணி (-0.172) மூன்றாவது இடத்திலும் உள்ளன. வரும் 7ஆம் தேதி மெல்போர்னில் நடக்கவுள்ள அடுத்த லீக் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்