ஆப்நகரம்

உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படாத ரஹானே இங்கிலாந்தில் சதம் அடித்து அசத்தல்!

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் உள்ளது.

Samayam Tamil 25 May 2019, 11:42 am
கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் உள்ளது.
Samayam Tamil Ajinkya Rahane


அது ஒரு புறம் இருக்க இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் தொடராக கவுண்டி கிரிக்கெட் தொடர் நடைப்பெற்று வருகின்றது. அதில் ஹாம்சயர் அணிக்காக விளையாடி இந்திய டெஸ்ட் அணி துணை கேப்டன் ரஹானே சதம் அடித்து அசத்தியுள்ளார்.

உலகக் கோப்பை தொடர் வரும் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை இங்கிலாந்து & வேல்ஸில் நடைப்பெற உள்ளது. இதற்காக 10 அணிகள் தகுதி பெற்று ரவுண்ட் ராபின் முறையில் போட்டி நடக்க உள்ளது.

World Cup 2019: உலகக் கோப்பையை பயிற்சி ஆட்டம்- இன்று நியூசிலாந்துடன் இந்தியா மோதல்

உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி இன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது.

நான் இல்லாத கிரிக்கெட்டா? உலகக் கோப்பை நடக்கும் இங்கிலாந்தில் விளையாட கிளம்பிய அஸ்வின்!

ரஹானே சதம்:
உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் இந்திய அணிக்கு முன்னதாகவே ரஹானே இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி கிரிக்கெடில் கலந்து கொள்ள சென்று விட்டார். இதில் ஹாம்சயர் அணிக்காக விளையாடும் ரஹானே நாட்டிங்ஹாம்டிரிங் எதிராக முதல் இன்னிங்ஸில் 10, இரண்டாவது இன்னிங்ஸில் 117 ரன்களை குவித்து அசத்தினார்.

10-2 என தள்ளாடிய ஹாம்சயர் அணிக்கு ரஹானே 117, கேப்டன் சாம் நார்தீஸ்ட் 133 ரன் எடுத்து ஹாம்சயர் அணி வெற்றிக்கு வித்திட்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்