ஆப்நகரம்

வங்கதேசத்துக்கு வினையாக டி.ஆர்.எஸ்.,! : மறுபிறவியில் கோலி இரட்டை சதம் !

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தப்பிப்பிழைத்த இந்திய கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்தார்.

TOI Sports 10 Feb 2017, 12:42 pm
ஹைதராபாத்: வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தப்பிப்பிழைத்த இந்திய கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்தார்.
Samayam Tamil 4
வங்கதேசத்துக்கு வினையாக டி.ஆர்.எஸ்.,! : மறுபிறவியில் கோலி இரட்டை சதம் !


இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. இந்த டெஸ்ட் ஹைதராபாத்தில் நடக்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர் முரளி விஜய், கேப்டன் கோலி ஆகியோர் சதம் அடித்து கைகொடுக்க இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுக்கு 356 ரன்கள் எடுத்தது.

இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய அணிக்கு ரகானே (82) அரைசதம் அடித்து அவுட்டானார். எதிர் முனையில் கோலி, 150 ரன்களை கடந்தார். இதன் மூலம் சொந்தமண்ணில் நடந்த டெஸ்டில் ஒரே சீசனில் அதிக ரன் எடுத்த வீரர்கள் வரிசையில் முன்னாள் வீரர் சேவக்கை (2004-05ல் 1105 ரன், 17 இன்னிங்ஸ்) பின்னுக்கு தள்ளி இந்திய கேப்டன் கோலி, முதலிடம் பிடித்தார்.

Hail King Kohli! @imVkohli #INDvBAN pic.twitter.com/DYt62iw20K — BCCI (@BCCI) February 10, 2017 பின் வந்த சகா துணையுடன் தொடர்ந்து அதிரடியை வெளிப்படுத்திய கேப்டன் கோலி, 180 ரன்கள் எடுத்த போது மெஹாதி பந்தில் எல்.பி.டபில்யு., முறையில் அவுட்டானார். இதை உடனடியாக கோலி ரிவியூ செய்ய, முடிவு இவருக்கு சாதகமாக திரும்பியது. தொடர்ந்து வேகமாக ரன்கள் சேர்த்த கோலி, டெஸ்ட் அரங்கில் தனது 4வது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இவர் 204 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இதன் மூலம் வங்கதேச அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த கேப்டன்கள் பட்டியலில் தென் ஆப்ரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித்தை (232 ரன்கள்) , கோலி தொடர்ந்து இரண்டாவது இடம் பிடித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்