ஆப்நகரம்

கப்டில் அரைசதம் : இந்திய பவுலர்கள் ஏமாற்றம் !

இந்தூரில் நடக்கும் மூன்றாவது டெஸ்டில், நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் அரைசதம் அடித்தார். விக்கெட் கைப்பற்ற தவறிய இந்திய பவுலர்கள் ஏமாற்றம் அளித்தனர்.

TOI Sports 10 Oct 2016, 11:48 am
இந்தூர்: இந்தூரில் நடக்கும் மூன்றாவது டெஸ்டில், நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் அரைசதம் அடித்தார். விக்கெட் கைப்பற்ற தவறிய இந்திய பவுலர்கள் ஏமாற்றம் அளித்தனர்.
Samayam Tamil 5 dec by 432 runs
கப்டில் அரைசதம் : இந்திய பவுலர்கள் ஏமாற்றம் !


இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்டிலும் இந்திய அணி வென்றது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் இந்தூரில் நடக்கிறது. கேப்டன் விராட் கோலி (211)இரட்டை சதம், ரகானே (188) சதம் கைகொடுக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில், 5 விக்கெட்டுக்கு 557 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. இரண்டாவதுநாள் ஆட்டநேர முடிவில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில், விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்திருந்தது. கப்டில் (17), லதாம் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

இருவரும் அரைசதம்:
இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த நியூசிலாந்து அணிக்கு கப்டில், லதாம் ஜோடி நிதானமான துவக்கம் அளித்தது. இந்திய பவுலர்களை எளிதாக இந்த ஜோடி சமாளித்தது. பின் கேப்டன் கோலி, அஷ்வின், ரவிந்திர ஜடேஜாவின் சுழற் தாக்குதலை பயன்படுத்தினார்.

இதிலும் சமாளித்து ஆடிய கப்டில், முதலில் அரைசதத்தை எட்டினார். இதன்பின் ஜடேஜா பந்தில் பவுண்டரி அடித்த லதாம், அரைசதத்தை பதிவு செய்தார். இவர் 53 ரன்கள் எடுத்த போது அஷ்வின் சுழலில் அவரிடமே சிக்கினார். மற்ற பவுலர்கள் விக்கெட் கைப்பற்ற தவறினர்.

இதையடுத்து மூன்றாவது நாள் உணவு இடைவேளையின் போது, நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்து 432 பின் தங்கியுள்ளது. கப்டில் (59), வில்லியம்சன் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்