ஆப்நகரம்

தோல்வியால் துவண்ட இந்திய அணி: நாள் முழுக்க அறையில் முடங்கியது

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டில் தோல்வியுற்று தொடரை இழந்த இந்திய அணி ஒருநாள் முழுக்க ஹோட்டல் அறையில் முடங்கியுள்ளது.

Samayam Tamil 19 Jan 2018, 1:30 pm
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டில் தோல்வியுற்று தொடரை இழந்த இந்திய அணி ஒருநாள் முழுக்க ஹோட்டல் அறையில் முடங்கியுள்ளது.
Samayam Tamil inquisition begins after sa series loss india players confined to hotel
தோல்வியால் துவண்ட இந்திய அணி: நாள் முழுக்க அறையில் முடங்கியது


தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் இரு போட்டிகளிலும் சிறிய இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற முடியாமல் தோல்வியைத் தழுவியுள்ளது.

இதனால், மிகவும் துவண்டு போன இந்திய அணி வீரர்கள் போட்டி முடிந்த மறுநாள் தாங்கள் தங்கியுள்ள ஹோட்டல் அறையிலேயே முடிங்கிவிட்டனர். அப்போது, கேப்டன் விராட் கோலி சில வீரர்கள் செய்த தவறுகள் பற்றி அவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும் தெரியவந்துள்ளது.

தொடக்கத்தில் சொதப்பும் முரளி விஜய், கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளாத கே.எல்.ராகுல், டெஸ்ட் போட்டி என்றதும் தனது ஒருநாள் ஆட்டத்தை மறந்துவிட்ட ரோஹித் மற்றும் ரன் அவுட் சாபத்துக்கு ஆளாகியுள்ள புஜாரா ஆகியோரிடம் கோலியும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் பேசியிருப்பதாகத் தெரிகிறது.

இன்னும் ஒரே ஒரு டெஸ்ட் மட்டுமே மீதம் உள்ள நிலையில் அணியில் இனிமேல் மாற்றம் செய்யாமல் தவறு செய்த வீரர்களுக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. ரஹானே, புவனேஷ்வர் குமார், ஜடேஜா ஆகியோருக்கு மூன்றாவது டெஸ்டிலாவது வாய்ப்பு கொடுக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்