ஆப்நகரம்

’தல’ தோனி கிடைக்க புனே அணி தவம் செஞ்சிருக்கனும்: உனத்கத்!

ஐபிஎல் தொடரில் ‘தல’ தோனி கிடைக்க புனே அணி தவம் பண்ணிருக்க வேண்டும் என அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் தெரிவித்துள்ளார்.

TOI Sports 20 May 2017, 1:20 pm
ஐதராபாத்: ஐபிஎல் தொடரில் ‘தல’ தோனி கிடைக்க புனே அணி தவம் பண்ணிருக்க வேண்டும் என அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ipl 2017 blessed to have steve smith and ms dhoni in our side jaydev unadkat
’தல’ தோனி கிடைக்க புனே அணி தவம் செஞ்சிருக்கனும்: உனத்கத்!


இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் லீக் போட்டிகள் முழுவதுமாக முடிந்த நிலையில், பிளே ஆப் சுற்றுகளுக்கு மும்பை, புனே, ஐதராபாத், கொல்கத்தா அணிகள் தகுதி பெற்றன.

பிளே ஆப் சுற்றுகளில், ஐதராபாத், கொல்கத்தா அணிகள் வெளியேறின. இந்நிலையில் நாளை ஐதராபாத்தில் நடக்கும் பைனலில், மும்பை அணி, புனே அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில், பைனலில் மும்பை அணியை வீழ்த்த, தயாராக உள்ளதாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உனத்கத் கூறுகையில்,’ தோனி, ஸ்மித் இருவருமே அவர்களின் அணியின் மிகச்சிறந்த தலைவர்கள். இருவர்கள் இருவரும் ஒரே அணியில் இடம் பெற்றதற்கு புனே அணி தான் தவம் செய்திருக்க வேண்டும். அவர்களுக்கு கீழ் விளையாட வாய்ப்பு கிடைத்தது, உண்மையில் கடவுளின் ஆசிர்வாத உள்ளது என்று தான் சொல்லவேண்டும். பைனலில் மும்பை அணியை மீண்டும் வீழ்த்துவோம் ’ என்றார்.

“Steve Smith and MS Dhoni have been brilliant. Both leaders have been great for their countries. We have been blessed to have them around,” the left-arm pacer told India Today.

அடுத்த செய்தி

டிரெண்டிங்