ஆப்நகரம்

Prayas Ray Barman: 15 வயது வீரர் 1.5 கோடிக்கும், 17 வயது வீரர் 4.8 கோடிக்கு எடுக்கப்பட்ட அசத்தல் வீரர்கள்

ஐபிஎல் 2019 போட்டிக்கான வீரர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்வு இன்று நடந்தது. இதில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வு நடந்துள்ளது.

Samayam Tamil 18 Dec 2018, 10:13 pm
ஐபிஎல் 2019 போட்டிக்கான வீரர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்வு இன்று நடந்தது. இதில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வு நடந்துள்ளது.
Samayam Tamil Prayas Ray Barman


கடந்த முறை அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஜெய்தேவ் உனத்கட், இந்த முறையும் 8.4 கோடிக்கு ராஜஸ்தான் அணிக்கு எடுக்கப்பட்டார். மற்றொரு வீரர் தமிழகத்தை சேர்ந்த வரூண் சக்கரவர்த்தியும் 8.4 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

கோடீஸ்வரரான 15 வயது வீரர்:
15 வயதே ஆன ஆல்ரவுண்ர் சிறுவனான பிரயாஸ் ராய் பர்மானை எடுக்க கடுமையான போட்டி நிலவியது. இதுவரை ஐபிஎல் போட்டியில் விளையாடாத பிரயாஸின் ஆரம்ப அடிப்படை விலை 20 லட்சத்துக்கு தொடங்கி, இறுதியில் 1.5 கோடி ரூபாய் கொடுத்து ராயல் சேலஞசர்ஸ் பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது.








4.8 கோடிக்கு ஏலம்:
அதே போல் 17 வயதான பஞ்சாப்-ஐ சேர்ந்த பிரப்சிங் சிங்கை ஏலம் எடுக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஆர்வம் காட்டியது. 19 மற்றும் 23 வயதுக்குட்பட்ட இந்தியா அணியில் பிரப்சிங் சிங் விளையாடியுள்ளார். ராஜஸ்தான் அணி, மும்பை, பஞ்சாப் என மாறி, மாறி ஏலத்தில் போட்டி போட்டன.

கடைசியில் பஞ்சாப் அணி 4.8 கோடி ரூபாய்க்கு பிரப்சிங் சிங்கை ஏலத்தில் வாங்கியது. இவரின் அடிப்படை விலையும் வெறும் 20 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்