ஆப்நகரம்

Virender Sehwag: ஐபிஎல் ஆலோசகர் பொறுப்பிலிருந்தும் வெளியேறி அதிர்ச்சி அளிக்கும் சேவாக்

கிரிக்கெட் விளையாடாவிட்டாலும், ஆலோசகராக இருந்து மகிழ்வித்த சேவாக் பஞ்சாப் அணியிலிருந்து விடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 4 Nov 2018, 12:31 pm
ஐபிஎல் 2019 போட்டியில் கிங்ஸ் 11 பஞ்சாப் அணியின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
Samayam Tamil Virender-Sehwag


முன்னாள் இந்திய அணி அதிரடி பேட்ஸ்மேன் விரேந்திர சேவாக் கிரிக்கெட்டில் விளையாடாவிட்டாலும், ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு ஆலோசகராக பணியாற்றி வந்தது, அவரது ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்து வந்தது.

இந்நிலையில் சேவாக் பஞ்சாப் அணி ஆலோசகர் பொறுப்பிலிருந்து வெளியேறுவதாக தனது டுவிட்டர் பக்கத்தி தெரிவித்துள்ளார்.

விரேந்திர சேவாக் டுவிட்டர் பதிவில், “எல்லா மகிழ்ச்சிகரமான நிகழ்வும் ஒரு சமயம் முடிவுக்கு வரும். அது போல நான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 2 சீசனில் விளையாடியுள்ளேன். அதே போல் ஒரு சீசனுக்கு அணி வீரர்களுக்கு ஆலோசகராக செயல்பட்டுள்ளேன்.


தற்போது பஞ்சாப் அணியின் உறவிலிருந்து விலகுகிறேன். இத்தனை ஆண்டுகளாக பஞ்சாப் அணியுடன் இருந்த நெருங்கிய உறவு முடிகிறது. பஞ்சாப் அணிக்கு மிக்க நன்றி, அந்த அணி வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்