ஆப்நகரம்

இனிமே தான் செம்ம ஆட்டம் ஆரம்பம்... : கொல்கத்தா அணியின் பயிற்சியாளரான முன்னாள் அதிரடி மன்னன் மெக்கலம்!

மும்பை: முன்னாள் நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரண்டன் மெக்கலம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராகவுள்ளதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 15 Aug 2019, 5:45 pm
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கலம். இவர் சமீபத்தில் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். இந்நிலையில் தற்போது கரிபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவுள்ளார்.
Samayam Tamil Brendon McCullum


அதிரடி மன்னன்:
கடந்த 2016ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மெக்கலம், சர்வதேச அளவிலான டி-20 லீக்கில் மட்டும் பங்கேற்று வந்தார். மெக்கலம் நியூசிலாந்து அணிக்காக 101 டெஸ்ட் (6453 ரன்கள்), 260 ஒருநாள் (6083 ரன்கள்) பங்கேற்றுள்ளார்.

அடுத்த பொறுப்பு:
இந்நிலையில் தற்போது இவர் வரும் 2020 ஐபிஎல்., கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தலைமைப்பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விடாத உறவு:
மெக்கலம் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையேயான உறவு, முதல் ஐபிஎல்., கிரிக்கெட் தொடரில் இருந்து உள்ளது. முதல் ஐபிஎல்., கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய மெக்கலம், அதிரடியாக 158 ரன்கள் விளாசி அசத்தினார்.

தவிர, ஐந்து ஆண்டுகளாக கொல்கத்தா அணிக்காக விளையாடினார். தொடர்ந்து கடந்த 2009ல் நடந்த ஐபிஎல்., கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டார்.

மிகப்பெரிய கவுரவம்:
இதுகுறித்து மெக்கலம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வது மிகப்பெரிய கவுரவம். ஐபிஎல்., கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் கொல்கத்தா அணி நிர்வாகிகளுடன் சேர்ந்து அணியின் வெற்றிக்கு கடினமாக உழைப்பேன்.’ என குறிப்பிட்டுள்ளார்.


நீண்ட காலம்...:
இதுகுறித்து கொல்கத்தா சி.இ.ஓ., வெங்கி கூறுகையில், ‘பிரண்டன் மெக்கலம் நீண்ட நாட்களாக கொல்கத்தா அணியுடன் பயணம் செய்து வருகிறார். அவரின் தலைமை, நேர்மை, ஆக்ரோஷமான ஸ்டைல், எல்லாம் சேர்ந்து அணி வீரர்களுக்குள் உள்ள திறமையை வெளியில் கொண்டுவரும்.’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்