ஆப்நகரம்

IPL 2023: 'மே 14-ல் ஓய்வுபெறும் தோனி'...ரசிகர்கள் இதை செய்யணும்: உத்தரவுபோடும் சிஎஸ்கே நிர்வாகம்? தரமான முடிவுதான்!

தோனி ஓய்வுபெறும் நாளில் ரசிகர்கள் இதை செய்யணும் என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Authored byமதுரை சமயன் | Samayam Tamil 10 Mar 2023, 6:53 am
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. அதன்படி போட்டிகள் மார்ச் 31ஆம் தேதி துவங்கி மே 28ஆம் தேதி முடிய உள்ளது. துவக்க போட்டியும், பைனலும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil மகேந்திரசிங் தோனி


ஹோம் கிரோண்டில்:

கொரோனா காரணமாக கடந்த இரண்டு சீசன்களில் அணிகள், தங்களது ஹோம் கிரோண்டில் விளையாட முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், இந்தாண்டில் அனைத்து அணிகளும் தங்களது ஹோம் கிரோண்டில் விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

ரசிகர்கள் நம்பிக்கை:

கேப்டன் மகேந்திரசிங் தோனி தனது கடைசிப் போட்டியை சென்னை சேப்பாக்கத்தில் விளையாடுவேன் எனக் கூறியிருந்தார். அதன்படி இந்தாண்டு கோப்பையை வென்றுகொடுத்துவிட்டு, சென்னையில் ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

புதிய அறிவிப்பு:

இந்நிலையில், மகேந்திரசிங் தோனி எப்போது ஓய்வினை அறிவிப்பார் என்பது குறித்து சிஎஸ்கே நிர்வாகி ஒருவர் பேட்டிகொடுத்துள்ளார். அதில், ''மகேந்திரசிங் தோனி மே 14ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டி முடிந்த உடனே ஓய்வினை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளது. இப்போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. இருப்பினும், இதுகுறித்து என்னால் அதிகாரப்பூர்வமாக கூறிவிட முடியாது. தோனிதான் இறுதி முடிவினை எடுப்பார். தோனி எடுக்கும் முடிவுக்கு நிர்வாகம் முழு சம்மதம் தெரிவிக்கும்'' எனக் கூறினார்.

ரசிகர்கள் இதை செய்யணும்:

இந்நிலையில், தோனி ஓய்வுபெறும் அந்த நாளில், சேப்பாக்கம் வரும் ரசிகர்கள் தோனியின் 7ஆம் நம்பர் ஜெர்சியை அணிந்து வர வேண்டும் என சிஎஸ்கே நிர்வாகம் உத்தரவுபோட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தோனியின் 7ஆம் நம்பர் கொண்ட ஜெர்சியை சிஎஸ்கே நிர்வாகம் 50% தள்ளுபடி விலையில் விற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆன்-லைன் மற்றும் நேரடியாக சில கடைகளிலும் இந்த ஜெர்சி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

தோனி ஓய்வு அறிவித்தப் பிறகு, சிஎஸ்கேவின் பயிற்சியாளராக அவர் செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. பென் ஸ்டோக்ஸ் 17ஆவது சீசன் முதல் கேப்டனாக செயல்படுவார் எனக் கருதப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
மதுரை சமயன்
நான் மதுரை சமயன். பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால், கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு. தற்போது, Times Of India சமயம் தமிழில் Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்