ஆப்நகரம்

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க 578 வீரர்கள் தேர்வு!

இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சுமார் 578 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

Samayam Tamil 21 Jan 2018, 2:53 am
இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சுமார் 578 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil ipl auction 578 players set to go under the hammer
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க 578 வீரர்கள் தேர்வு!


ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளின் 11வது சீசன் இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் ஏலம் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது.

இந்த ஏலத்தில் பங்கேற்கு உலகெங்கிலும் இருந்து சுமார் 1122 கிரிக்கெட் வீரர்கள் விண்ணப்பித்தனர். இவர்களில் இருந்து சுமார் 578 வீரர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அஸ்வின், வெயின் பிராவோ, கிறிஸ் கெய்ல், பொல்லார்டு, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் போன்றோர் ஏலம் மூலம் எடுக்க இருக்கிறார்கள்.

இதில் 36 வீரர்களின் அடிப்படை விலை 2 கோடி ரூபாயாகவும், 32 வீரர்களின் அடிப்படை விலை 1.5 கோடி ரூபாயாகவும், 31 பேரின் அடிப்படை விலை 1 கோடி ரூபாயாகவும், 23 பேரின் அடிப்படை விலை 75 லட்சம் ரூபாயாகவும், 122 பேரின் அடிப்படை விலை 50 லட்சமாகவும், 14 வீரர்களின் அடிப்படை விலை 40 லட்சமாகவும், 17 பேரின் விலை 30 லட்சமாகவும், 303 பேரின் விலை 20 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வீரர்களில் ஒரு அணி அதிகபட்சமாக 25 பேர் வரை ஏலம் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்