ஆப்நகரம்

மே 24இல் ஐபிஎல் 2020 ஃபைனலா? போட்டிகளும் இரவு 7:30 மணிக்கு துவக்கம்!

புதுடெல்லி: வரும் 2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஃபைனல் மே 24இல் நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல போட்டிகளும் இரவு 7:30 மணிக்கே துவங்கப்படும் என தெரிகிறது.

Samayam Tamil 7 Jan 2020, 6:18 pm
வரும் 2020 ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்தது. இதில் எட்டு அணிகளும் சேர்ந்து மொத்தமாக ரூ. 140.30 கோடி செலவு செய்து 62 வீரர்களை ஏலத்தில் எடுத்தது. இதில் 29 வெளிநாட்டு வீரர்களும் அடக்கம். அதிக விலைக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் ரூ. 15.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
Samayam Tamil IPL


எப்போது துவக்கம்
இதற்கிடையில் ஐபிஎல் அட்டவணை குறித்த எதிர்பார்ப்புகள் தற்போதே எகிற துவங்கியுள்ளன. இந்நிலையில் கடந்த முறை சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றதால் முதல் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் வரும் மார்ச் 29ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்த முறை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மொத்தமாக 57 நாட்கள் நடக்கும் என தெரிகிறது. இதன்படி பார்த்தால் ஐபிஎல் 2020 ஃபைனல் போட்டி மே 24ஆம் தேதி நடக்கும் என தெரிகிறது.

நேரமும் மாற்றம்
அதேபோல போட்டிகள் அனைத்தும் இரவு 8:00 மணிக்கு பதிலாக அரைமணி நேரம் முன்பாகவே அதாவது இரவு 7:30 மணிக்கே துவங்கப்படும் என தெரிகிறது. கடந்த ஆண்டில் போட்டி முடிய நடு இரவு ஆனதால், இந்த முறை போட்டிகளை முன்னதாகவே துவங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. அதேபோல ஒருநாளைக்கு ஒரு போட்டிகளை நடத்தவும் திட்டமிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அணிகள் ஒத்துழைக்குமா
மதிய நேர போட்டிகளை பொறுத்தவரையில் எதிர்பார்த்த அளவு ரசிகர்கள் மைதானத்துக்கு வருவதில்லை. அதனால் தான் நாளுக்கு ஒரு போட்டியை நடத்த திட்டமிடுவதாகவும், இதற்கு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளின் ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் போட்டிளை அரைமணி நேரம் முன்னதாக போட்டிகளை துவங்கும் முடிவுக்கு அணிகள் மத்தியில் எதிர்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இதற்கு டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட மெட்ரோ நகரத்தில் வசிக்கும் ரசிகர்கள் மாலை 6 மணிக்கு அலுவலக பணிகளை முடித்து விட்டு டிராபிக்கை தாண்டி வருவதற்கு 8 மணி சரியாக இருக்கும் என்பதால் அதற்கு அணிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்