ஆப்நகரம்

அயர்லாந்தை அலறவிட்ட ரோஹித் – தவான்: இந்திய அணி 208 ரன்கள் குவிப்பு

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 208 ரன்கள் எடுத்துள்ளது.

Samayam Tamil 27 Jun 2018, 10:38 pm
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 208 ரன்கள் எடுத்துள்ளது.
Samayam Tamil DgthhNoXcAIMBtF


இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு முன் அயர்லாந்தில் இரண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கிறது. இன்று நடைபெறும் முதல் போட்டி இந்திய கிரிக்கெட் அணிக்கு 100வது டி20 போட்டி ஆகும்.

இப்போட்டியில் அயர்லாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய தொடக்க வீரர்கள் ரோஹித் – தவான் ஜோடி அதிரடியாக பவுண்டரியும் சிக்ஸரும் ரன்குவித்தனர்.

தவான் 74 (45) ரன்களும் ரோஹித் 97 (61) ரன்களும் விளாசி ஆடமிழந்தனர். 17 ஓவர்களுக்குப் பின் களமிறங்கிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்களைச் சேர்ந்தது.
209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் அயர்லாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்