ஆப்நகரம்

டேரன் சமி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த இர்பான் பதான்!

வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் டேரன் சமி, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இனவெறி தாக்குதலை எதிர்கொண்டதாக தெரிவித்த நிலையில், அது போல இல்லை என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 10 Jun 2020, 1:02 pm
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ஃபிளாய்டு காவல்துறை அதிகாரியால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுக்க கறுப்பின மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil Irfan Pathan


இனவாதத்துக்கு எதிரான இந்தப் போராட்டம் மனிதர்கள் இடையே பாகுபாடு காட்டப்படுவது குறித்து விவாதங்களை உலகம் முழுக்க ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இனவாதம் தோலின் நிறத்தின் அடிப்படையில் மட்டுமல்ல. வேறு சமய நம்பிக்கையைச் சார்ந்தவர் என்பதாலேயே வீடு வாங்குவதற்கு அனுமதி மறுக்கப்படுவதும் தான்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.


இது குறித்து பேசிய இர்பான் பதான் கூறுகையில், “இது நான் கவனித்த விஷயம். யாரும் இதை மறுக்க முடியாது. மேலும் அதிக எடை கொண்டவர்களை குண்டு எனபது, கருப்பு நிறம் கொண்டவர்களை காலா என கேலி செய்வதும், இது போன்ற விஷயங்களை கட்டுப்படுத்துவதுடன், நாவையும் அடக்க வேண்டும். கடந்த 2014 இல் நடந்த விஷயத்தை டேரன் சமி தற்போது தெரிவிக்கிறார்.” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்