தற்போது தென்னாப்பிரிக்க தொடர் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை 26,28ஆம் தேதிகளில் இந்திய இளம் அணி, அயர்லாந்து சென்று டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது.
அடுத்து, இந்திய சீனியர் அணி இங்கிலாந்து சென்று, கடந்த ஆண்டில் ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டியில் (ஜூன் 1-5) பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
வாய்ப்பு உறுதி:
அடுத்து இரு அணிகளுக்கு இடையில் தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான அணிதான் உலக அளவில் அதிக கவனம் பெற்றுள்ளது. காரணம், இதற்கான அணிதான் அக்டோபர் இறுதியில் ஆஸ்திரேலியாவில் துவங்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியாக இருக்கும். அதன்பிறகு மாற்றம் செய்யப்படாமல், அந்த வீரர்களுக்கு ரெகுலராக வாய்ப்பு வழங்கப்படும் என கங்குலி கூறியிருந்தார்.
இதனால், இங்கிலாந்து வெள்ளைப் பந்து தொடருக்கான அணித் தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
பதான் கணிப்பு:
இந்நிலையில், அக்டோபர் இறுதியில் ஆஸ்திரேலியாவில் துவங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய உத்தேச XI அணியை இர்பான் பதான் கணித்து வெளியிட்டுள்ளார். அவரது அணியில் இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் போன்ற இளம் வீரர்கள் இடம்பெறவில்லை.
ஓபனர்களாக கே.எல்.ராகுல் ரோஹித் ஷர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஒன்டவுன் இடம் விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்து சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா ஆகியோர் இருக்கிறார்கள்.
தொடர்ந்து ரிஷப் பந்திற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை இர்பான் பதான் தேர்வு செய்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களாக ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பரீத் பும்ரா ஆகியோர் உள்ளனர். ஸ்பின்னராக யுஜ்வேந்திர சஹலை சேர்க்க வேண்டும் என பதான் பரிந்துரை செய்துள்ளார்.
இர்பான் பதானின் உத்தேச XI அணி (டி20 உலகக் கோப்பை 2022): கே.எல்.ராகுல், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஜ்வேந்திர சஹல், ஜஸ்பரீத் பும்ரா.
அடுத்து, இந்திய சீனியர் அணி இங்கிலாந்து சென்று, கடந்த ஆண்டில் ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டியில் (ஜூன் 1-5) பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
வாய்ப்பு உறுதி:
அடுத்து இரு அணிகளுக்கு இடையில் தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான அணிதான் உலக அளவில் அதிக கவனம் பெற்றுள்ளது. காரணம், இதற்கான அணிதான் அக்டோபர் இறுதியில் ஆஸ்திரேலியாவில் துவங்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியாக இருக்கும். அதன்பிறகு மாற்றம் செய்யப்படாமல், அந்த வீரர்களுக்கு ரெகுலராக வாய்ப்பு வழங்கப்படும் என கங்குலி கூறியிருந்தார்.
இதனால், இங்கிலாந்து வெள்ளைப் பந்து தொடருக்கான அணித் தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
பதான் கணிப்பு:
இந்நிலையில், அக்டோபர் இறுதியில் ஆஸ்திரேலியாவில் துவங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய உத்தேச XI அணியை இர்பான் பதான் கணித்து வெளியிட்டுள்ளார். அவரது அணியில் இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் போன்ற இளம் வீரர்கள் இடம்பெறவில்லை.
ஓபனர்களாக கே.எல்.ராகுல் ரோஹித் ஷர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஒன்டவுன் இடம் விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்து சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா ஆகியோர் இருக்கிறார்கள்.
தொடர்ந்து ரிஷப் பந்திற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை இர்பான் பதான் தேர்வு செய்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களாக ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பரீத் பும்ரா ஆகியோர் உள்ளனர். ஸ்பின்னராக யுஜ்வேந்திர சஹலை சேர்க்க வேண்டும் என பதான் பரிந்துரை செய்துள்ளார்.
இர்பான் பதானின் உத்தேச XI அணி (டி20 உலகக் கோப்பை 2022): கே.எல்.ராகுல், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஜ்வேந்திர சஹல், ஜஸ்பரீத் பும்ரா.