ஆப்நகரம்

இன்று ஓய்வை அறிவிக்கிறாரா ‘சுவிங் கிங்’ இர்பான் பதான்?

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் இன்று மாலை தனது ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Samayam Tamil 4 Jan 2020, 4:16 pm
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் இர்பான் பதான். இவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக 29 டெஸ்ட் (100 விக்கெட்), 120 ஒருநாள் (173 விக்கெட்), 24 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய முதல் பவுலர் என்ற வரலாறு படைத்தவர்.
Samayam Tamil Irfan pathan


வாசிம் அக்ரம்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டின் முதல் ஓவரின் கடைசி மூன்று பந்தில் சல்மான் பட், யூனிஸ் கான், முகமது யூசுப் என மூன்று பேரையும் அவுட்டாக்கி ஹாட்ரிக் சாதனையை அரங்கேற்றினார். தனது அசத்தல் சுவிங் பவுலிங்கால் முன்னாள் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரமுடன் ஒப்பிடப்பட்டார்.

உலகக்கோப்பை அணியில்
கடந்த 2007 இல் நடந்த முதல் டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் பதான் இடம் பெற்றிருந்தார். இவர் ஃபைனலில் 4 ஓவர்கள் பவுலிங் செய்து 16 ரன்களுக்கு 3 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியில் முக்கியபங்கு வகித்தார். இவர் கடைசியாக கடந்த 2012இல் நடந்த டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.


7 ஆண்டுக்கு முன்
கடந்த 7 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்த இர்பான் பதான் இன்று மாலை தனது சர்வதேச ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியின் பட்டியலில் மாலை 4:30 மணிக்கு “லைவ் பேர்வெல் பதான்” தி சுவிங் கிங் என வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்