ஆப்நகரம்

‘பார்ட்-2’ வில் மீண்டும் மிரட்டுவாரா மகேந்திர சிங் ‘பாகுபலி’?

தடைகளை உடைத்து மீண்டும் களமிறங்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் அதே பார்மில் ‘தல’ தோனி மிரட்டுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

TOI Sports 14 Jul 2017, 9:01 pm
சென்னை: தடைகளை உடைத்து மீண்டும் களமிறங்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் அதே பார்மில் ‘தல’ தோனி மிரட்டுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Samayam Tamil is mahendra singh bahubali again rocks for chennai super kings
‘பார்ட்-2’ வில் மீண்டும் மிரட்டுவாரா மகேந்திர சிங் ‘பாகுபலி’?


இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல்., தொடர் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதில் சாம்பியன் அணியாக திகழ்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அணி நிர்வாகிகள் செய்த பிக்ஸிங் தவறால், இரண்டு ஆண்டுகள் தடையை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் சென்னை அணிக்கு விதிக்கப்பட்ட தடை சரியாக இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் சென்னை அணியின் வருகையை எதிர்பார்த்து தற்போது முதல், ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாட துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் தடைகாலத்துக்கு முன்பு இருந்தது போல கேப்டனாக மீண்டும் தோனி மிரட்டுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபகாலமாக இந்திய அணியில் விளையாடும் தோனியின் செயல்பாடு திருப்தி அளிக்கும் விதத்தில் இல்லை என்ற கருத்து நிலவுகிறது.

தவிர, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆமை வேகத்தில் விளையாடிய தோனி, மோசமான சாதனை படைத்தார். ஆனாலும் ஒரு போட்டியில் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற தோனி தனது பேட்டிங் ஒயின் மாதிரி, நாட்கள் போகப்போகத்தான் கூடுதல் சுவையாக இருக்கும் என தெரிவித்தார். இதற்கு ஏற்ப தற்போது மீண்டும் வரும் சென்னை அணியில் தோனி பழைய ஒயினாக தித்திப்பார் என ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

is mahendra singh bahubali again rocks for chennai super kings?

அடுத்த செய்தி

டிரெண்டிங்