ஆப்நகரம்

பயிற்சியாளருக்கு சேவக் சரிப்பட்டு வருவாரா?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிற்கு முன்னாள் வீரர் சேவக் சரிப்பட்டுவரமாட்டார் என பிசிசிஐ வட்டாரங்கள் உணர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TOI Sports 21 Jun 2017, 5:21 pm
லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிற்கு முன்னாள் வீரர் சேவக் சரிப்பட்டுவரமாட்டார் என பிசிசிஐ வட்டாரங்கள் உணர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Samayam Tamil is sehwag be the right candidate for indian team cricket coach
பயிற்சியாளருக்கு சேவக் சரிப்பட்டு வருவாரா?


சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி 5 ஒருநாள், 1 டி-20 போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இத்தொடருக்கு முன்னதாக, இந்திய கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் கும்ளே இடையே கடுமையான கருத்து வேறுபாடு நிலவியது. ஒருவழியாக சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரை தாக்குபிடித்த கும்ளே, தற்போது தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதன் பின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் தீவிரத்தில் பிசிசிஐ உள்ளது. இந்நிலையில் இந்த பயிற்சியாளருக்கான தேர்வு போட்டியில், முன்னாள் அதிரடி துவக்க வீரர் சேவக் உள்ளார். இவரை தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஐதராபாத் அணியின் தற்போதைய பயிற்சியாளரான முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி உள்ளார். இவரு கடந்த 2005-2007 வரை இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வேலை செய்த அனுபவம் டாம் மூடிக்கு உள்ளது. ஆனால் சேவக்கிற்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகர் அனுபவமே உள்ளது.

இந்நிலையில், சேவக்கை தேர்வு செய்வது இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சரியாக வருமான என ஆலோசனைக்குழு யோசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு போதிய அனுபவம் இல்லாததோடு, வீரர்களுடன் அனுசரித்து செல்லும் குணமும் இல்லை. இதற்கு ஏற்ப மிலவிம் பொறுமைசாலியான கும்ளேவுடனே கேப்டன் கோலி ஒத்துப்போகாத காரணத்தினால் மீண்டும் அணியில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் உணர்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் முன்னாள் இயக்குனராக இருந்த ரவி சாஸ்திரி இந்த பதவிக்கு விண்ணப்பிக்காத போதும் அவரை பயிற்சியாளராக தேர்வு செய்யவும் ஆலோசனை நடப்பதாக தெரிவிக்கப்படுகின்றன. இதனால், மேலும் விண்ணப்பங்களை வரவேற்பதாகவும், வரும் ஜூலை மாதம் இந்திய அணி, இலங்கை செல்லும் முன் புதிய பயிற்சியாளர் தேர்வு செய்யப்படுவார் என்றும் பிசிசிஐ.,யின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்