ஆப்நகரம்

கவுண்டியில் கலக்கும் இசாந்த் சர்மா

இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இசாந்த் சர்மா முதல் போட்டியிலேலே 5 விக்கெட்டுகளை அள்ளி அசத்தியுள்ளார்.

Samayam Tamil 18 Apr 2018, 8:17 pm
இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இசாந்த் சர்மா முதல் போட்டியிலேலே 5 விக்கெட்டுகளை அள்ளி அசத்தியுள்ளார்.
Samayam Tamil jcAsZe8SUD


இங்கிலாந்தில் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கி நடக்க இருக்கும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட சில வீரர்கள் கவுண்டி போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்த வகையில், ஐபிஎல் போட்டிகளில் ஏலம் எடுக்கப்படாத இந்திய அணி வேப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா இப்போதே கவுண்டி போட்டியில் விளையாடத் தொடங்கியுள்ளார்.
சசெக்ஸ் அணிக்காக விளையாடும் இசாந்த் பிர்மிங்ஹாம் அணிக்கு எதிராக தனது முதல் கவுண்டி போட்டியில் களமிறங்கியுள்ளார். இதில் அவர் 69 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், 2வது இன்னிங்சில் இயான் பெல், ஜோனத்தன் டிராட் ஆகிய அனுபவ வீரர்கள் விக்கெட்டுகளைச் சாய்த்தார். இப்போட்டி டிராவில் முடிந்திருக்கிறது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்