ஆப்நகரம்

T20 World Cup 2021: மாறணும், பழைய பன்னீர் செல்வமா மாறணும்…இளம் வீரரை தட்டி எழுப்பும் அகார்கர்!

இளம் வீரர் ஒருவர் தொடர்ந்து சொதப்பி வருவது கவலையளிக்கிறது என அஜித் அகார்கர் பேசியுள்ளார்.

Samayam Tamil 29 Sep 2021, 10:03 am
ஐபிஎல் 14ஆவது சீசன் நேற்றைய லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 135/6 ரன்கள் குவித்தது. இதனால், மும்பை இந்தியன்ஸ் இந்த இலக்கை சுலபமாக துரத்தி வெற்றிபெற்றுவிடும் என்றுதான் கருதப்பட்டது. ஆனால், 19ஆவது ஓவர்வரை சென்றுதான் 137/4 ரன்கள் சேர்த்து வெற்றிபெற்றது.
Samayam Tamil அஜித் அகார்கர்


சூர்யகுமார் படுமோசம்:


136 ரன்கள் இலக்கை துரத்திக் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் ஒன்டவுன் களமிறங்கினார். இவர் இதற்குமுன்பு நடைபெற்ற போட்டிகளில் 3 5, 8 போன்ற சொற்ப ரன்கள் மட்டும் அடித்திருந்ததால், 136 என்ற எளிய இலக்குக்கு எதிராக அழுத்தம், பதற்றம் இல்லாமல் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ, ரவி பிஸ்னோயின் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

IPL 2021: ‘போட்டி நேரம் மாற்றியமைப்பு’…பிசிசிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு…ரசிகர்கள் ஷாக்!

தேர்வாளர்கள் ஷாக்:

இவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வுக்கு முன்புவரை ஹீரோ போல் விளையாடி, பௌலர்களை மிரட்டி வந்தார். ஆனால், அணித் தேர்வுக்குப் பிறகு நடைபெற்ற 4 போட்டிகளில் வெறும் 16 ரன்கள் மட்டுமே அடித்திருப்பது, அணித் தேர்வாளர்களை அதிர வைத்திருக்கிறது. மேலும், இஷான் கிஷனும் மோசமாக விளையாடி வருகிறார். இவரும் முதல் மூன்று போட்டிகளில் சொதப்பியதால், பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக களமிறக்கப்படவே இல்லை என்பதுதான் சோகமான விஷயம். மறுபக்கம் தொடர்ந்த சொதப்பி வந்த ஹார்திக் பாண்டியா, நேற்றைய போட்டியில் மிரட்டலாக விளையாடி 40 ரன்கள் அடித்து, மும்பையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இருப்பினும், பந்துவீசாமல் இருப்பது இந்திய அணிக்கு கவலையான விஷயம்தான்.

குறிப்பாக சூர்யகுமார் யாதவின் பார்ம்தான் இங்குப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி ஓபனராக களமிறங்கினால், சூர்யகுமார்தான் ஒன்டவுனாக களமிறங்கும் நிலை ஏற்படும். இப்படி, முக்கியமான இடத்தில் களமிறங்கக் கூடியவர் 10 ரன்களை அடிக்கவே சிரமப்பட்டு வருவது, டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. இதனால், சூர்யகுமார் எஞ்சிய போட்டிகளில் பார்முக்கு திரும்ப வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆமா…நாங்க நிதானமா இல்ல..தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம்: கே.எல்.ராகுல் பரபரப்பு தகவல்!

அகார்கர் பேட்டி:

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள இந்திய அணி முன்னாள் வீரர் அஜித் அகார்கர், சூர்யகுமார் குறித்து கவலையுடன் பேசியுள்ளார். “சூர்யகுமார் யாதவ் கோல்டன்-டக் ஆனது அதிர்ச்சியளிக்கிறது. இவர் கடந்த சில போட்டிகளிலும் மோசமாக சொதப்பினார். பஞ்சாபுக்கு எதிரான போட்டியிலாவது பார்முக்கு வருவார் என எதிர்பார்த்தால் தவறான ஷாட் ஆடி ஆட்டமிழந்துள்ளார். அவர் களத்தில் சிறிது நேரமாவது தாக்குப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் மனவுறுதி அதிகமாகும். அவரது ஆட்டம் மிகவும் கவலையளிக்கிறது. இன்னும் சில ஐபிஎல் போட்டிகள்தான் இருக்கிறது. அதற்குள் சூர்யகுமார் பழைய பார்முக்கு திரும்பியே ஆக வேண்டும்” எனக் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்