ஹைதராபாத்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய வீரர்களான புஜாரா, முரளிவிஜய் நங்கூரமாக நிற்க உணவு இடைவேளையின் போது இந்திய அணி 1 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்தது.
இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன், வங்கதேச அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய அணி, பங்கேற்கவுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று ஹைதராபாத்தில் நடக்கிறது.
இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர் கே.எல்.ராகுல் (2) சொதப்பலான முறையில் போல்டானார்.
இதன்பின் வந்த புஜாரா, முரளி விஜய் உடன் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், ரன்கள் ஓடுவதில் சொதப்பியது இந்த ஜோடி. முதலில் புஜாரா ரன் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பினார். பின் முரளி விஜய்க்கு மிக ஈஷியானரன் அவுட் வாய்ப்பை வங்கதேச வீரர்கள் தவறவிட்டனர் . முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி, முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. விஜய் (45), புஜாரா (39) அவுட்டாகாமல் உள்ளனர்.
இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன், வங்கதேச அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய அணி, பங்கேற்கவுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று ஹைதராபாத்தில் நடக்கிறது.
இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர் கே.எல்.ராகுல் (2) சொதப்பலான முறையில் போல்டானார்.
இதன்பின் வந்த புஜாரா, முரளி விஜய் உடன் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், ரன்கள் ஓடுவதில் சொதப்பியது இந்த ஜோடி. முதலில் புஜாரா ரன் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பினார். பின் முரளி விஜய்க்கு மிக ஈஷியானரன் அவுட் வாய்ப்பை வங்கதேச வீரர்கள் தவறவிட்டனர் . முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி, முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. விஜய் (45), புஜாரா (39) அவுட்டாகாமல் உள்ளனர்.