ஆப்நகரம்

மும்பை இந்தியன்ஸை விட பும்ரா, ஹர்திக் இப்ப இவங்களுக்கு தான் ரொம்ப அவசியம்!

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியை விட ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோரின் தேவை தற்போது இந்திய அணிக்கு தான் அதிகம் உள்ளதாக மகிளா ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 22 Dec 2019, 10:50 am
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா. இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் வெஸ்ட் இண்டீஸ் இந்திய அணியில் இடம் பெற்றார். அதற்கு பின் காயம் காரணமாக தற்போது வரை சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளார்.
Samayam Tamil Hardik Pandya - Jasprit Bumrah


தொல்லையில்லை
இதற்கிடையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்ட இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பும்ரா பவுலிங் செய்தார். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பந்துவீசிய பும்ராவுக்கு காயம் ஏற்பட்ட பகுதியில் எவ்வித தொல்லையும் ஏற்படவில்லை.

மும்பை கண்கானிப்பு
இதையடுத்து அடுத்து வரவுள்ள இலங்கை அணிக்கு எதிரான டி-20 தொடரில் பும்ரா இடம் பெறுவார் என தெரிகிறது. அதேநேரம் பும்ராவின் காயத்தை அவர் பங்கேற்கும் ஐபிஎல் அணி நிர்வாகமான மும்பை இந்தியன்ஸ் அணியும் கவனித்து வருகிறது. அதேபோல இந்திய அணியைச் சேர்ந்த மற்றொரு மும்பை வீரர் ஹர்திக் பாண்டியாவும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.

இந்தியாவுக்கு தேவை
இவர்களின் காயம் குறித்து மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளரும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரருமான மகிளா ஜெயவர்தனே கூறுகையில், “பும்ரா விசாகப்பட்டினத்தில் பவுலிங் செய்ததது சிறப்பான விஷயம். அதேபோல ஹர்திக் பாண்டியாவின் ஆரோக்கியமும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இது மும்பை அணிக்கு நல்ல விஷயம் தான்.

விரைவில்
இருவரும் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்ப்பார்கள் என நினைக்கிறேன். கிரிக்கெட் வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம் தான். ஆனால் ஐபிஎல் தொடரில் அ அவர்கள் பங்கேற்பதற்கு முன்பாக இந்திய அணிக்கு தான் அவர்களின் அவசியம் அதிகம் தேவைப்படுகிறது. இருவருமே இந்திய அணியின் மிகப்பெரிய சொத்து ” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்