ஆப்நகரம்

பும்ரா, சஞ்சனா திருமணம்: தேதி, இடம், யாருக்கு அனுமதி? வெளியானது தகவல்!

ஜஸ்பரீத் பும்ரா, சஞ்சனா கணேசன் திருமணம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Samayam Tamil 15 Mar 2021, 12:36 pm
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பரீத் பும்ரா, விளையாட்டுத் துறை வர்ணனையாளர் சஞ்சனா கணேசன் இருவருக்கும் கோவாவில் மார்ச் 14ஆம் தேதி (நேற்று) திருணம் நடைபெற்றது. இதில் வெளிநபர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. குடும்ப உறுப்பினர்கள் 20 பேருக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அழைப்பு விடுக்கப்பட்டது.
Samayam Tamil பும்ரா - சஞ்சனா


குடும்ப உறுப்பினர்கள் யாரும் அலைபேசி பயன்படுத்தக்கூடாது என திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கேமார மூலம் புகைப்படம் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா காரணமாக வெளிநபர்கள், சிறப்பு விருந்தினர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே பும்ரா, சஞ்சனா திருமணம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. பல்வேறு புரளிகளும் உலா வந்தது. இந்நிலையில் தற்போது திருமணம் யாருக்கும் தெரியாமல் கப்சிப் என நடந்த முடிந்துள்ளது. சஞ்சனா, 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் இறுதிச் சுற்றுவரை முன்னேறியிருந்தார். தற்போது தனியார் தொலைக்காட்சியில் விளையாட்டுப் பிரிவு வர்ணனையாளராக உள்ளார்.

ஒரே கல்லில் இரண்டு மாங்கா: விராட் கோலி புது சாதனை!

இந்தியா, இங்கிலாந்து இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ரா கடைசிப் போட்டியில் களமிறங்கவில்லை. மேலும், தற்போது நடைபெற்றுவரும் டி20 தொடரிலும் அவரின் பெயர் இடம்பெறவில்லை. டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 எனச் சமநிலையில் உள்ளது. நாளை மூன்றாவது டி20 போட்டி நடைபெறும்.

பும்ரா பிறந்த சில வருடங்களில் அவரின் தந்தை காலமானார். பும்ரா மற்றும் அவரது சகோதரி இருவரும் தாயின் அரவணைப்பில்தான் வளர்ந்தனர். பும்ராவின் தாயார் அரசுப் பள்ளியில் துணை முதல்வராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்