ஆப்நகரம்

இந்திய பௌலர்கள் திணறுவது உறுதி: பட்லர் நம்பிக்கை!

இந்திய பௌலர்களை திணறடிக்கும் வகையில் பேட்டிங் செய்ய எங்கள் அணியில் ஒருவர் இருக்கிறார் என ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 31 Jan 2021, 9:07 am
இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் பிப்ரவரி 5ஆம் தேதி சென்னையில் துவங்கவுள்ளது. இங்கிலாந்து அணி வீரர்கள் கடைசியாக இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2-0 என டெஸ்ட் தொடரைக் கைபற்றி, தற்போது இந்தியா வந்துள்ளனர். இந்த சுற்றுப் பயணம் குறித்து இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ளார்.
Samayam Tamil ind vs eng


இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் ஒரு சதம், ஒரு இரட்டை சதம் விளாசினார். இதுகுறித்து பேசிய பட்லர், “சமீபத்தில் நடந்துமுடிந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டோம். குறிப்பாக, ஜோ ரூட் அற்புதமாக விளையாடி இரட்டை சதம் விளாசினார். லென்த் பால், ஸ்வீப் ஷாட் போன்றவற்றைச் சிறப்பாக அடித்து ஆடக் கூடியவர். இவர் அதிக டாட் பால்களை எதிர்கொள்ள மாட்டார்”

“குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு எதிராகச் சிறப்பாக விளையாடக் கூடியவர். பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தங்களை உண்டாக்க கூடியவர். மனதளவில், உடலளவில் வலிமையாக உள்ளார். இவரை வீழ்த்துவது சுலபமல்ல. இந்திய சுற்றுப் பயணத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்” என நம்பிக்கை தெரிவித்தார்.
Ind vs Eng: முடிந்தால் வெளியேற்றிப் பாருங்கள்... ஆர்ச்சர் சவால்!
இந்திய சுற்றுப் பயணத்திற்கு பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் முதல்முறையாக வருகை தந்துள்ளனர். இதுகுறித்துப் பேசுகையில், “ஆர்ச்சர் திறமையான வீரர். நிச்சயம் நல்லமுறையில் சோபிப்பார் என நம்புகிறேன். ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் போன்றவர்களும் இருப்பதால் பந்துவீச்சில் எந்தக் குறையும் இல்லை. பென் ஸ்டோக்ஸ் சிறந்த ஆல்-ரவுண்டர். அவரும் இந்த தொடரில் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனக் கருதுகிறேன். மொத்தத்தில் எங்கள் அணி வலிமையாகவே உள்ளது. தொடரைக் கைப்பற்ற அனைத்து தகுதியும் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்