லாகூர்: இலங்கை அணிக்கு எதிரான டி-20 தொடரை பாகிஸ்தான் அணி, முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்ற இலங்கை அணி, பாகிஸ்தான் அணி, 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் இரண்டு டி-20 போட்டியிலும் பாகிஸ்தான் அணி வென்றது. இரு அணிகள் மோதிய கடைசி டி-20 போட்டி, பாகிஸ்தானின் லாகூரில் நடந்தது. இதில் ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சோயிப் மாலிக் (51) அரைசதம் அடித்து கைகொடுக்க, அந்த அணி, 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்தது.
கடின இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு சோயிப் சானகா (54) மட்டும் கைகொடுக்க, 20 ஓவரில், இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 3-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்ற இலங்கை அணி, பாகிஸ்தான் அணி, 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் இரண்டு டி-20 போட்டியிலும் பாகிஸ்தான் அணி வென்றது. இரு அணிகள் மோதிய கடைசி டி-20 போட்டி, பாகிஸ்தானின் லாகூரில் நடந்தது. இதில் ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சோயிப் மாலிக் (51) அரைசதம் அடித்து கைகொடுக்க, அந்த அணி, 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்தது.
கடின இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு சோயிப் சானகா (54) மட்டும் கைகொடுக்க, 20 ஓவரில், இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 3-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியது.