ஆப்நகரம்

வில்லியம்சன், அகிலா தனஞ்சயா பந்துவீச்சில் சந்தேகம்: 14 நாளில் நிரூபிக்க கெடு!

துபாய்: இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில், பவுலிங் செய்த கேன் வில்லியம்சன், அகிலா தனஞ்சயா ஆகியோரின் பவுலிங் ஆக்‌ஷனில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Aug 2019, 3:53 pm
இலங்கை சென்றுள்ள நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இதில் பவுலிங் செய்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இலங்கை பவுலர் அகிலா தனஞ்சயா ஆகியோரின் பவுலிங் ஆக்‌ஷனில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
Samayam Tamil kane williamson and akila dananjaya reported for suspect bowling action
வில்லியம்சன், அகிலா தனஞ்சயா பந்துவீச்சில் சந்தேகம்: 14 நாளில் நிரூபிக்க கெடு!


வெறும் 3 ஓவர்கள்:
இப்போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் வெறும் 3 ஓவர்கள் பவுலிங் செய்தார். ‘பார்ட்-டைம்’ பவுலரான நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் அரிதாகவே பவுலிங் செய்வார்.

இந்நிலையில் 73 டெஸ்ட் போட்டிகளில், பங்கேற்று 29 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதே போல தனஞ்சயா, இலங்கை அணிக்காக 6 டெஸ்டில் பங்கேற்று, 33 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

5 விக்கெட் :
காலே டெஸ்டின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றிய தனஞ்சயா, இரண்டாவது இன்னிங்சில் 1 விக்கெட் என மொத்தமாக 6 விக்கெட் கைப்பற்றினார். முதல் டெஸ்டில் இவர்களின் பவுலிங் ஆக்‌ஷனில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

14 நாட்களுக்குள்:
இதையடுத்து இவர்கள் இருவரும் ஆகஸ்ட் 18ம் தேதியில் இருந்து 14 நாட்களுக்குள் ஐசிசி., நடத்தும் சோதனையில் பங்கேற்க வேண்டும். அதில் வென்றால் மட்டுமே சர்வதேச கிரிகெட்டில் இவர்கள் தொடர்ந்து பவுலிங் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.


இது தொடர்பாக ஐசிசி., வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியில் வில்லியம்சன், தனஞ்சயா ஆகியோரின் பவுலிங் ஆக்‌ஷனில் அதிகாரிகள் சந்தேகம் எழுப்பினர். அதனால் அவர்களின் அணிகளுக்கு சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்