ஆப்நகரம்

கோலி-கும்ப்ளே ஜோடிக்குக் கிடைத்த வெற்றி: ட்ராவிட் பாராட்டு

இங்கிலாந்துத் தொடரில் கருண் நாயரும் ஜெயந்த் யாதவும் சிறப்பாக ஆடியது விராத் கோலிக்கும் அனில் கும்ப்ளேக்கும் கிடைத்த வெற்றி என்று இந்திய இளைஞர் கிரிக்கெட் அணியின் பயறசியாளராக உள்ள ராகுல் ட்ராவிட் பாராட்டியுள்ளார்.

TNN 25 Dec 2016, 6:26 pm
இங்கிலாந்துத் தொடரில் கருண் நாயரும் ஜெயந்த் யாதவும் சிறப்பாக ஆடியது விராத் கோலிக்கும் அனில் கும்ப்ளேக்கும் கிடைத்த வெற்றி என்று இந்திய இளைஞர் கிரிக்கெட் அணியின் பயறசியாளராக உள்ள ராகுல் ட்ராவிட் பாராட்டியுள்ளார்.
Samayam Tamil karun nair jayant yadav success due to kohli kumble dravid
கோலி-கும்ப்ளே ஜோடிக்குக் கிடைத்த வெற்றி: ட்ராவிட் பாராட்டு


இந்தியா வந்த இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி 4-0 என வெற்றிபெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதில் இந்திய வீரர்கள் பலர் சிறப்பாக ஆடி வெற்றியை எளிதாக்கினர்.

இத்தொடரின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணியின் கருண் நாயர் முச்சதம் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளராக களமிறங்கிய ஜெயந்த் யாதவ் பேட்டிங்கிலும் கலக்கி, அரைசதம், சதம் என ரன்கள் குவித்தார். இதனால், இவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள் குவித்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், கருண் நாயரும் ஜெய்ந்த் யாதவும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியதற்குப் பின்னணியில் விராத் கோலியும் அனில் கும்ப்ளேயும் இருக்கிறார்கள். இதனால், கருண்-ஜெய்ந்த் பெற்ற வெற்றி கோலி-கும்ப்ளேக்கும் உரியது என்று கூறியுள்ளார்.

மேலும், 19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக, இந்திய அணிக்கு சிறந்த வீரர்களை வழங்குவதே எனக்குரிய கடமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்