ஆப்நகரம்

கிரிக்கெட் விளையாடும் போதே வீரர் மரணம்

கேரளாவில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது பவுலர் மைதானத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

TOI Sports 16 Dec 2017, 4:50 pm
கசர்கோட் : கேரளாவில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது பவுலர் மைதானத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
Samayam Tamil kasargod 25 year old cricket player collapses during match dies
கிரிக்கெட் விளையாடும் போதே வீரர் மரணம்


கேரளா மாநிலம் கசர்கோட்டில் உள்ள மஞ்சேஸ்வர் மெய்யபடவு பள்ளி மைதானத்தில் உள்ளூர் கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டி நடைப்பெற்றது. அப்போது போட்டியின் இறுதி ஓவரை வீசிக் கொண்டிருந்த பத்மநாபா ஜொடுகல்லு என்ற 25 வயதான வீரர் மாரடைப்பு காரணமாக மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.

வீரர்கள் அவரை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இருப்பினும் பத்மநாபா வழியிலேயே உயிரிழந்தார்.



இந்த சோக சம்பவத்தை அடுத்து இந்த கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்