ஆப்நகரம்

பந்து தாக்கி மைதானத்திலேயே உயிரிழந்த இளம் வீரர்!

ஸ்ரீநகர்: கிரிக்கெட்டின் ஷார்ட் பாலுக்கு மற்றொரு இளம் வீரர் உயிரைவிட்டுள்ளார்.

Samayam Tamil 12 Jul 2019, 7:36 pm
ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதுக்கு உள்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது. இதன் பாராமுல்லா அணிக்காக ஜஹாங்கிர் அகமது வார் விளையாடினார்.
Samayam Tamil Jahangir Ahmad War


இதில் அவர் பேட்டிங் செய்த போது ஜஹாங்கிர் அகமதுக்கு கழுத்துப்பகுதியில் பந்து பலமாக தாக்கியது. இதையடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஜஹாங்கிரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்.


அவர் ஹெல்மெட் அணிந்திருந்தபோதும், அவரது கழுத்துபகுதியில் பலமாக பந்து தாக்கியது. மைதானத்தில் இருந்து மருத்துவமனை அருகிலேயே இருந்தது. அங்கு மருத்துவர் ஒருவர் இதுபோன்ற விபத்துக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தார். இருந்தாலும் ஜஹாங்கிரை காப்பாற்ற முடியாதது வேதனை அளிப்பதாக போட்டி அமைப்பாளர் தெரிவித்தார். ஜஹாங்கிர் 11ம் வகுப்பு படித்து வந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்