திருவனந்தபுரம் : கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், தன் நீண்ட நாள் தோழியை எளிமையாக திருமணம் செய்து கொண்டார். இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரில் பங்கேற்று பிரபலமானவர், சஞ்சு சாம்சன். இவர் தற்போது ரஞ்சி டிராபியில் கேரள அணிக்காக விளையாடி வருகிறார்.
ஐபிஎல்., தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடியுள்ள சாம்சன், இம்முறை ராஜஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ளார். தவிர, இந்திய அணிக்காக ஒரு டி20 போட்டியிலும் சாம்சன் பங்கேற்றுள்ளார்.
இவர், கல்லூரியில் படித்த போது சாருலதாவுடன் காதலில் விழுந்தார். சுமார் ஐந்து ஆண்டுகளாக இருவரும் காதலித்துவந்தனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. இந்நிலையில் நேற்று இவர்களின் திருமணம் வீட்டிலேயே மிக எளிமையாக நடந்தது.
இதில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர். மாலையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஜாம்பவான் டிராவிட், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டார்.
சாருலதா மனித வள மேம்பாடு தொடர்பான மேற்படிப்பு படிக்கிறார். இவரது தந்தை பிரபல கேரளா பத்திரிக்கையான மாத்ருபூமியின் தலைமை ஆசிரியர்.
ஐபிஎல்., தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடியுள்ள சாம்சன், இம்முறை ராஜஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ளார். தவிர, இந்திய அணிக்காக ஒரு டி20 போட்டியிலும் சாம்சன் பங்கேற்றுள்ளார்.