ஆப்நகரம்

உலகக் கோப்பைக்கு முன் நடந்த கொடுமை - அணியின் எல்லா வீரர்களும் டக் அவுட்.. அதுவும் போல்ட்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30ம் தேதி தொடங்க உள்ளது. அதே சமயம் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

Samayam Tamil 17 May 2019, 2:09 pm

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30ம் தேதி தொடங்க உள்ளது. அதே சமயம் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
Samayam Tamil New Project (86)


இளைஞர்கள், சிறுவர்கள் என பலருக்கும் உலகக் கோப்பை தாக்கம் ஏற்பட்டுள்ளது. சும்மாவே கிரிக்கெட் ஆடும் நம்ம பசங்க, உலகக் கோப்பை நெருங்குவதையடுத்து எங்கு பார்த்தாலும் கிரிக்கெட் விளையாடும் நிகழ்வை காண முடிகின்றது.

அனைத்து வீரர்களும் டக் அவுட்:
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில், மாவட்டங்களுக்கு இடையேயான 19 வயதுக்குட்பட்டோருக்கான 30 ஓவர் கொண்ட பெண்கள் கிரிக்கெட் தொடர் நடைப்பெற்றது.
இந்த தொடரில் காசர்கோடு - வயநாடு ஆகிய மாவட்ட பென்கள் அணிகள் போட்டியில் மோதின. முதலில் ஆடிய காசர்கோடு அணி வீராங்கனைகளின் செயல்பாடு வரலாற்றில் இது போன்ற மோசமான பதிவை காண முடிதா அளவிற்கு இருந்தது.

தோனியை ஓரங்கட்ட நினைக்கும் குல்தீப் யாதவ்... கோலியை புகழ்ந்து பேசி தோனி மீது தாக்குதல்

காசர்கோடு அணியின் அனைத்து வீராங்கனைகளும் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகினர். அதுவும் அனைவரும் போல்ட் ஆகி விக்கெட்டை இழந்த பரிதாபமான போட்டியாக அமைந்தது.

தோனி பெரும்பாலும் தவறான ஆலோசனை தான் கொடுப்பார் தெரியுமா? - கொதிக்கும் குல்தீப் யாதவ்


இதில் காசர்கோடு அணிக்கு அதிர்ஷ்ட வசமாக எதிரணி சார்பாக 4 ரன்கள் உதிரி ரன்களாக வழங்கியதால் 4 ரன்னுக்கு 10 விக்கெட் இழந்தது.
தொடர்ந்து ஆடிய வயநாடு அணி முதல் ஓவரிலேயே 4 ரன் அடித்து 10விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்