ஆப்நகரம்

Khaleel Ahmed: விளையாடிய 5வது போட்டியிலேயே ஐசிசி அபராதம் பெற்ற கலீல் அகமது

இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் விதியை மீறியதாக ஐசிசி அபராத விதித்துள்ளது.

Samayam Tamil 30 Oct 2018, 5:28 pm
மும்பை : இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் விதியை மீறியதாக ஐசிசி அபராத விதித்துள்ளது.
Samayam Tamil Khaleel.


இந்தியா சுற்றுப் பயணம் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட வந்துள்ளது. டெஸ்ட் தொடரை இந்தியா வென்ற நிலையில், ஒருநாள் போட்டியின் 4 போட்டி முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கின்றது.

கலீல் அகமதுக்கு அபராத புள்ளி :
நேற்று நடந்த போட்டியில் இந்தியா முதலில் ஆடி 377 ரன்களை குவித்தது. தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்களை மட்டும் எடுத்து 244 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

மேலும் படிக்க : உலகக் கோப்பையில் பங்கேற்கும் வீரர்களுக்கு இதெல்லாம் வேண்டும் : பெரிய லிஸ்ட் போட்ட விராட் கோலி

இந்த போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் மார்லோன் சாமுவேலை இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது வீழ்த்தினார். இது கலீல் விளையாடிய சர்வதேச 5வது ஒருநாள் போட்டியாகும்.


அவரை அவுட்டாக்கிய மகிழ்ச்சியில் கலீல் அகமது மிக ஆக்ரோஷமாக கத்தினார். இந்நிலையில் ஐசிசி போட்டி விதி 2.5 யை மீறியதாக, கலீலை எச்சரிக்கும் வண்ணம் ஐசிசி ஒரு அபராத புள்ளியை வழங்கப்பட்டுள்ளது.

கலீல் நேற்று நடந்த போட்டியில் 5 ஓவரில் 13 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்