இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்றால் மட்டும்தான், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில், நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்று அசத்தியது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் துவங்கி நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.
இந்திய அணி அறிவிப்பு:
இதனைத் தொடர்ந்து கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜஸ்பரீத் பும்ரா சேர்க்கப்படவில்லை. அவருக்கு காயம் குணமடைந்துவிட்டாலும், ஓய்வுக்காக நீக்கப்பட்டுள்ளார். மற்றபடி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள்தான் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இடம்பெற்றுள்ளனர்.
கே.எல்.ராகுல் பதவி பறிப்பு:
இருப்பினும், ஒரேயொரு மாற்றம் மட்டும் நிகழந்துள்ளது. ஆம், கே.எல்.ராகுலின் துணைக் கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இவர், முதல் இரண்டு போட்டிகளிலும் படுமோசமாக சொதப்பினார். ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம், டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்து முரட்டு பார்மில் இருக்கும் ஷுப்மன் கில்லை சேர்க்காமல், கே.எல்.ராகுலை ஓபனராக களமிறக்கியதே கடும் விமர்சனங்களை பெற்றது.
யாரும் அறிவிக்கப்படவில்லை:
அந்த விமர்சனங்களுக்கு உரமூட்டும் வகையில், முதல் டெஸ்டில் 20, இரண்டாவது டெஸ்டில் 17, 1 என சொற்ப ரன்களை மட்டும்தான் அவர் சேர்த்தார். இவர் முதல் இரண்டு போட்டிகளிலும் துணைக் கேப்டனாக இருந்ததால்தான், வேறு வழியில்லாமல் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியில் கே.எல்.ராகுல் ஒரு வீரராக மட்டுமே இடம்பெற்றுள்ளார். துணைக் கேப்டன் பதவி யாருக்கு என்பதை இன்னமும் அறிவிக்கவில்லை.
கில்தான் ஓபனர்?
கே.எல்.ராகுலிடம் இருந்து துணைக் கேப்டன் பதவியை பறித்ததன் மூலம், அவர் கடைசி இரண்டு போட்டிகளுக்கான ஆடும் லெவனில் சேர்க்கப்பட மாட்டார் என்பது தெரிய வந்துள்ளது. ஷுப்மன் கில்தான் ஓபனராக இருப்பார் எனக் கருதப்பட்டது.
ராகுலுக்கு கெடு விதிப்பு:
இந்நிலையில், கே.எல்.ராகுல் மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டிற்கு திரும்பி இரானி கோப்பை தொடரில் தன்னை நிரூபித்தால் மட்டும்தான் மீண்டும் அணியில் இடம் கிடைக்கும் என பிசிசிஐ தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
ரோஹித், டிராவிட் எதிர்ப்பு:
இந்நிலையில், இந்த முடிவுக்கு தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது. அதுமட்டுமல்ல, கே.எல்.ராகுல் தொடர்ந்து இந்திய அணியுடன் இருந்தால்தான், அவரால் மீண்டும் பார்முக்கு திரும்ப முடியும் அதற்கு நான் பொறுப்பு என தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அதிரடியாக தெரிவித்ததாகவும், இதற்கு சில பிசிசிஐ நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பெரும்பாலான பிசிசிஐ நிர்வாகிகள் டிராவிட் முடிவுக்கு சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
3ஆவது டெஸ்ட்:
இதன்மூலம், மூன்றாவது டெஸ்டில் மீண்டும் ஷுப்மன் கில் ஓரங்கட்டப்பட்டு, கே.எல்.ராகுலுக்கே ஓபனர் பதவி கிடைக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
இந்நிலையில், நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்று அசத்தியது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் துவங்கி நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.
இந்திய அணி அறிவிப்பு:
இதனைத் தொடர்ந்து கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜஸ்பரீத் பும்ரா சேர்க்கப்படவில்லை. அவருக்கு காயம் குணமடைந்துவிட்டாலும், ஓய்வுக்காக நீக்கப்பட்டுள்ளார். மற்றபடி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள்தான் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இடம்பெற்றுள்ளனர்.
கே.எல்.ராகுல் பதவி பறிப்பு:
இருப்பினும், ஒரேயொரு மாற்றம் மட்டும் நிகழந்துள்ளது. ஆம், கே.எல்.ராகுலின் துணைக் கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இவர், முதல் இரண்டு போட்டிகளிலும் படுமோசமாக சொதப்பினார். ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம், டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்து முரட்டு பார்மில் இருக்கும் ஷுப்மன் கில்லை சேர்க்காமல், கே.எல்.ராகுலை ஓபனராக களமிறக்கியதே கடும் விமர்சனங்களை பெற்றது.
யாரும் அறிவிக்கப்படவில்லை:
அந்த விமர்சனங்களுக்கு உரமூட்டும் வகையில், முதல் டெஸ்டில் 20, இரண்டாவது டெஸ்டில் 17, 1 என சொற்ப ரன்களை மட்டும்தான் அவர் சேர்த்தார். இவர் முதல் இரண்டு போட்டிகளிலும் துணைக் கேப்டனாக இருந்ததால்தான், வேறு வழியில்லாமல் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியில் கே.எல்.ராகுல் ஒரு வீரராக மட்டுமே இடம்பெற்றுள்ளார். துணைக் கேப்டன் பதவி யாருக்கு என்பதை இன்னமும் அறிவிக்கவில்லை.
கில்தான் ஓபனர்?
கே.எல்.ராகுலிடம் இருந்து துணைக் கேப்டன் பதவியை பறித்ததன் மூலம், அவர் கடைசி இரண்டு போட்டிகளுக்கான ஆடும் லெவனில் சேர்க்கப்பட மாட்டார் என்பது தெரிய வந்துள்ளது. ஷுப்மன் கில்தான் ஓபனராக இருப்பார் எனக் கருதப்பட்டது.
ராகுலுக்கு கெடு விதிப்பு:
இந்நிலையில், கே.எல்.ராகுல் மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டிற்கு திரும்பி இரானி கோப்பை தொடரில் தன்னை நிரூபித்தால் மட்டும்தான் மீண்டும் அணியில் இடம் கிடைக்கும் என பிசிசிஐ தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
ரோஹித், டிராவிட் எதிர்ப்பு:
இந்நிலையில், இந்த முடிவுக்கு தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது. அதுமட்டுமல்ல, கே.எல்.ராகுல் தொடர்ந்து இந்திய அணியுடன் இருந்தால்தான், அவரால் மீண்டும் பார்முக்கு திரும்ப முடியும் அதற்கு நான் பொறுப்பு என தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அதிரடியாக தெரிவித்ததாகவும், இதற்கு சில பிசிசிஐ நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பெரும்பாலான பிசிசிஐ நிர்வாகிகள் டிராவிட் முடிவுக்கு சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
3ஆவது டெஸ்ட்:
இதன்மூலம், மூன்றாவது டெஸ்டில் மீண்டும் ஷுப்மன் கில் ஓரங்கட்டப்பட்டு, கே.எல்.ராகுலுக்கே ஓபனர் பதவி கிடைக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.