ஆப்நகரம்

ரிஷப் பந்த் மண்டையை பதம் பார்த்த கம்மின்ஸ்... விக்கெட் கீப்பரான ராகுல்!

மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காயமடைந்ததால், ராகுல் விக்கெட் கீப்பராக களமிறங்கினார்.

Samayam Tamil 14 Jan 2020, 6:30 pm
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
Samayam Tamil KL Rahul


தவன் ஆறுதல்
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தவன் (74), ராகுல் (47) ஆகியோர் கைகொடுக்க, இந்திய அணி 49.1 ஓவரில் 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 25 ரன்கள் அடித்து கம்மின்ஸ் வேகத்தில் அவுட்டானார். கம்மின்ஸ் வீசிய பந்து பந்த்தின் பேட்டில் பட்டு, பின் பந்த்தின் ஹெல்மெட்டில் பட்டு அதை டர்னர் கேட்ச் பிடித்தார்.


பாண்டே வருகை
அப்போது பந்த்துக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும், தொடர்ந்து அவருக்கு மூளை அதிர்வு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் ரிஷப் பந்துக்கு பதிலாக ராகுல் விக்கெட் கீப்பராக களமிறங்கினார். காயமடைந்த பந்துக்கு பதிலாக மாற்று வீரராக மணீஷ் பாண்டே களமிறங்கினார். சஞ்சு சாம்சன் அணியில் இல்லாத காரணத்தால் ராகுல் கண்டிப்பாக விக்கெட் கீப்பிங் பணிக்கு தள்ளப்பட்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்