ஆப்நகரம்

கேலி செஞ்ச இங்கிலாந்துக்கு சதம் அடித்து சரியான ‘நோஸ்கட்’ தந்த ‘கிங்’ கோலி....!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் கேப்டன் கோலி சதம் அடித்து அசத்த, இந்திய அணி வலுவான முன்னிலையில் உள்ளது.

Samayam Tamil 20 Aug 2018, 8:53 pm
நாடிங்ஹாம்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் கேப்டன் கோலி சதம் அடித்து அசத்த, இந்திய அணி வலுவான முன்னிலையில் உள்ளது.
Samayam Tamil kohli-m4


இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கட்டாயம் வென்றால் தான் இந்திய அணி தொடரை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் நட்டிங்ஹாமில் நடக்கும் டெஸ்டில் களமிறங்கியது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 161 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 168 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றது.

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்து 292 ரன்கள் என்ற வலுவான நிலையை எட்டியது.

இதையடுத்து மூன்றாவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு கோலி சதம் அடித்து அசத்த, இந்திய அணி வலுவான நிலையை நோக்கி முன்னேறியது. இதன் மூலம் கோலி டெஸ்ட் அரங்கில் தனது 23வது சதத்தை எட்டினார். இவர் 103 ரன்கள் எடுத்த போது அவுட்டானார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்